Friday 20 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 என்னில் என்னை காணாத்தருனம்

எல்லாம் நான் இழந்த தருனம்

ஒற்றை இதயம் என்னை தாங்கியே

எல்லா உறவின் தூணாய் நின்றவர்

இற்றைபொழுது  ஏனே இறைவன்  

கஸ்ரத்தை கொடையாய்  கொடுத்தே 

 கஸ்ரங்களை  சுமக்க சொல்கின்றான்

இதையும் தாங்கி மலையாய் எழுந்து

தவிக்கும் மனையாளின் கணீர்துடைக்க

வரவே வேண்டும் இறையே  என்னில்

கண்ட துயரம் எல்லாம் எனியும்  கானா

நன்மைகொண்ட நாட்கள்  வேண்டும்

எந்தன் உயிரே முதலாய் போகும் வரமே

வரமாய் வேண்டும்  வதைப்பதும்

சிதைவதும் நானாகவே முடியவேண்டும்

கண்ணீர் கண்கள் புன்னகைக்கும்

பொழுதாய்  நாளைய பொழுது வேண்டும்

இறையின் தீபமே  இல்லமாய் மாறிட நீயே 

எழுந்தே நடத்திட வா!!!




No comments: