என்னில் என்னை காணாத்தருனம்
எல்லாம் நான் இழந்த தருனம்
ஒற்றை இதயம் என்னை தாங்கியே
எல்லா உறவின் தூணாய் நின்றவர்
இற்றைபொழுது ஏனே இறைவன்
கஸ்ரத்தை கொடையாய் கொடுத்தே
கஸ்ரங்களை சுமக்க சொல்கின்றான்
இதையும் தாங்கி மலையாய் எழுந்து
தவிக்கும் மனையாளின் கணீர்துடைக்க
வரவே வேண்டும் இறையே என்னில்
கண்ட துயரம் எல்லாம் எனியும் கானா
நன்மைகொண்ட நாட்கள் வேண்டும்
எந்தன் உயிரே முதலாய் போகும் வரமே
வரமாய் வேண்டும் வதைப்பதும்
சிதைவதும் நானாகவே முடியவேண்டும்
கண்ணீர் கண்கள் புன்னகைக்கும்
பொழுதாய் நாளைய பொழுது வேண்டும்
இறையின் தீபமே இல்லமாய் மாறிட நீயே
எழுந்தே நடத்திட வா!!!
No comments:
Post a Comment