Sunday, 24 October 2021

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 பந்தபாசங்களில் 

 நம்பிக்கையில்லாதவள்

ஆழ்மன பொக்‌கிஷம்

 அவள்  மாமன் தானே!

ஆழ்ந்த உறக்கத்தின்

 கனவாகியே  அவள் 

தூக்கத்தை கெடுத்தே

எழுப்பிடும்  காதலும் 

  மாமன்தானோ !வழிந்தோடும்  

விழித்துளி வழிநீர் 

நீர்துளிவிம்பமாகி 

விழும் துளி  ஏந்தியே 

துடைத்திட கிடைத்திட்ட கரம்

மாமன் அவன்  காரமோ !

நிஜமற்று போன

அவள்  வாழ்க்கையில் 

நிழலான  கனவின் 

 உயிர்த்துடிப்பாய் 

துடிக்கும்   அவள் உயிர் 

மாமன்  தானோ !!


No comments: