கட்டுமரம் கடலையை கிழிக்க
கட்டிவைத்த ஆசை அலையாக
மாமன் கட்டுடல் கம்பீரத்தில் கண்ணம்மா
கற்பனையும் திமிராச்சி
அதிகாலை மல்லிகை பூ
பூத்த வாசத்தில்மாமன்
கொஞ்சம் தான் ஏங்கிட
கண்ணம்மா வைச்ச பார்வை
நம்பிக்கைக்கு மாமன் கைதுடுப்பாச்சி
ஆதவன் துயில் கொள்ளும்
இருளுக்கு இருமனயெளியாச்சி
நீரீன் ஓசை அடங்கிட
கண்ணமாவுடல் யாரும் வடிக்காமல்
கற்சிலையாச்சி அந்த
கற்சிலையுள் கண்ணிரெண்டும்
உயிர்கொண்டெழுந்து
ஏக்காம் காத்திருக்கு மாமன்
வரவிற்காய்
No comments:
Post a Comment