Saturday 21 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

 வாழ்க்கையில் இலகுவாய் ஓன்று

கிடைப்பதால்  இலகுவானதை

விட்டு இன்னென்றை

வாழ்க்கையில்  தேடித்தொலைந்து 

கொண்டே போகின்றோம் நாம்!

அடையாலத்தை புதைத்திட்டு

நாம்  வாழும்  வாழ்க்கை

ஒழுக்கமென நம் புள்ளைகளை 

உருவாக்கின்றோம்!பண்பாட்டு

தடைகல்லகற்றி தடம்புரண்டு

நம்வாழ்க்கையே நமக்கு

புரியாமல் தடுமாறுது உரிமையென்னும்

பக்கங்கள் !!காலத்தை கடந்தும்

வாழ்வை வாழ்ந்தும்

புரிந்தே தடமாறு முதுமை!!

இந்த நிமிட நியத்தை தேடும் இளமை 

எதிரில் நிக்கின்ற போலியறியாமல்

உண்மையென்கின்ற  ஆசையால்

தவறுயென்னும் வாழ்க்கை வட்டத்திற்க்குள்

விழுந்து இழந்து அழிந்தெழுந்த பின்னே

உடைத்து எரியபட்ட  நம்பிக்கையால்

உடைந்தே அழுகின்றது விம்பம்கண்ணாடியில்!!


No comments: