ஒற்றைமரத்தை தாங்கியே
கிடக்கின்றது விழுது
அதை மரம் கடமையென்கின்றது
நான் தியாகம் என்றேன்
தன்னை சிந்திக்கும் மரம்
தன் கைபிடிக்கு பின்னேசரிந்தே கிடக்கும் விழுதையும்
சிந்தித்தால் அழகாய் பற்றிய
விழுதும் பெருமை கொள்ளும்
மரமாகும் சுயநலமாய்
பெருமைபடும் போது கொஞ்சம்
சிந்திக்கவும் செய்தால் தன்னை
தாங்கியே கிடத்திடும் விழுதும்
கடமைதாண்டி கனவு தாண்டி
தியகத்தின் பெருமைக்குள்
அழகாகும் சாதனைகளை
வலிகள் தாங்கிடும்போதே
நம்மைவிட மற்றவர்
வலி பெரிதாய் தோன்றவேண்டும்
தீபம் அழகான பாதையின் வழி!!!
No comments:
Post a Comment