வலிகள் நிறைந்த
மனிதமனங்கள் வலியை
கண்டு மனதை கொன்று
மருந்தென்று சிரிக்கின்றது
தூக்கம் தொலைத்து
தூரம் கடந்து
பாதயேட்டக் காட்டு வாழ்வை
நினைந்து
மனதைக்கொன்று சிரிக்கின்றது
வலியின் வழியேகண்ணீர்த்துளிகள்
மரணத்தின் வழியே
இழப்பின்வலிகள்
கொடுமையிலும் கொடுமையென்ற
மனங்கள் கொடுமைகண்டு
மனதைகொன்று சிரிக்கின்றது
துன்பப்பட்டு துயரப்பட்டு
வறுமையில்
துடித்த மனங்கள்
வலிகளை கண்டு மனதைக்கொன்று
சிரிக்கின்றது
அச்சம் கொண்டு அழுது தவித்து
இல்லமற்று இருளில் புகுந்து
இன்னல் கண்ட மனங்கள்
மனதைகொன்று
துன்பத்தில் இன்பத்தை
தேடிச்சிரக்கின்றது
இறையெழுதிய
கதையில் எழுந்த பிழை
மிருகமனிதம்!!!
உற்ற உயிர் வலியென்று
மற்றஉயிர்வதைகான் உலகு!!!
No comments:
Post a Comment