நான் நேசித்து சுவாசித்து
வாசித்த புத்தகம் என்
அப்பா!
எனக்குள் பூசிக்கும் உணர்வாய்
வியாபித்து கிடக்கின்றார்!
நான் யாசித்து கேட்பபதுவும்
அவர் நேசமே !
நான் யோசிக்கும் காலமும்
அவர் வாசிக்க தந்த நெடிகளே!
எங்குமில்லா வாசனையின்
உயிர்தீண்டலும்அவரே!
இன்றும் வலிகண்டு
என் அருகே அமர்த்திருக்கும்
சாமியும்அவரே !
கனவேடு உறவாடும்
ஆறுதலும் அவரே! என்னை
புரித்த ஆத்மாவும் அவரே
என் கோவம் கண்டு
அச்சம் கொண்டு
தவமாய் இருந்ததும்அவரே !
தன் பாதச்சுவட்டில்
என் பாதம் வைத்து
முற்களையெடுத்து
என் பாதம் வைத்து
நடக்கவைத்தவரும்அவரே !
இன்று என் வாழ்வில்
நான் தேடும் ஆறுதலும் அவரே
என் கைபிடித்து தூக்கும்
கனவும் அவரே!
இதுவரை நான் காணா
ஆண்மையும் அவரே
என்னை முழுவதும் புரிந்த
இலக்கணமும் அவரே!!!
.jpg)
No comments:
Post a Comment