Thursday 26 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

 நான் நேசித்து சுவாசித்து

வாசித்த புத்தகம் அப்பா

எனக்குள் பூசிக்கும் உணர்வாய்

வியாபித்து கிடக்கின்றார்

நான் யாசித்து கேட்பபதுவும்

அவர் நேசமே  நான் யோசிக்கும்

காலமும் அவர் வாசிக்க தந்த நெடிகளே

எங்க்குமில்லா வாசனையின் 

உயிர்தீண்டலும்அவரே 

இன்றும்வலிகண்டு

என் அருகே அமர்த்திருக்கும் 

சாமியும்அவரே 

கனவேடு உறவாடும் 

ஆறுதலும்  அலரே என்னை

புரித்த ஆத்மாவும் அவரே

என் கோவம் கண்டு  அச்சம்

கொண்டு   தவமாய் இருந்ததும்அவரே  

தன்  பாதச்சுவட்டில் பாதம்

வைத்து முற்களையெடுத்து

என் பாதம் வைத்து 

நடக்கவைத்தவரும்அவரே 

இன்று என் வாழ்வில்

 நான் தேடும்ஆறுதலும் அவரே

என்   கைபிடித்து தூக்கும் 

கனவும் அவரே

இதுவரை நான் காணா  

ஆண்மையும் அவரே

என்னை முழுவதும் புரிந்த 

இலக்கணமும் அவரே!!!


No comments: