நிலைகொள்ளா வேலைகளை
நிலையில்லா உயரத்தில்
வைத்து! நிலையில்லாமல்
நின்றுகொண்டு
நிற்கும் உறவுகளை
நிலைமாற செய்துவிட்டு
நிலைக்கும் கற்பனைக்குள்
நீயும் நானும் பேசும்
வார்த்தைகள் எனறும்
போலிமுகம்கொண்ட
விம்பத்தின் அழகே !
இங்கே நாம் தொலைத்து
தேடும் வாழ்விற்க்குள்
அன்பே தோடும் பொருளானால்
காதல் எப்படி வாழும்
வாழ்க்கையாகும் !
யாரோ எழுதிய கற்பனைக்குள்
யாரோ தொலைத்த காதலை
நாமும் இன்னும் எதுவென
தெரியாமலே தேடிக்கொண்டே
இருக்கின்றோம் !அன்பேயில்லாமல் !!

No comments:
Post a Comment