உதிரம் பாய்ந்தோடிய
நிலமகள் மேனிதனில்
துறவறம் கொண்டதுவோ
உணர்ச்சிகள் !
குடித்த உதிரத்தில் நிலமகள்
செழிக்க வான் சிந்திய
கண்ணீர்த்துளிகளில்
முளைக்கவில்லையோ
விதைகள்
இன்னும் காரணம் காரணம்
தேடும் பலிகளின் விழிகளில்
சுயநலம் பிரிக்கின்றதோ
உறவுகளின் உணர்வுகளை
காலம் சொல்லும் கதைக்களத்தில்
இன்னும் மிதியுள்ளது
சேர்த்திட முடியா
தோல்விகளால் நிலமகளை
மூடிக்கிடய உதிரத்தின்
வண்ணங்களே !!
.jpg)
No comments:
Post a Comment