Sunday 15 January 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அதிகாலை என்னை எழுப்ப

ஆதவன் விழிகள் திறக்க!!

இல்லங்கள் எங்கும்  ஆரவாரம்

யன்னல் காற்றாய் பேச 

என் கைதொலைபேசி

காதைக்கடிக்க மெல்ல 

எழுந்திட் ட மனசு  கையேடு 

கதைபடிக்க  

  விடியாமல் தவிக்கு விடியல் !!

உற்சாகம்  குதுகலமற்று

 மாமனைத்தேடுது கண்கள்  

ஒற்றைச்தேனீர்ச்சுவை பட்டு  

சிதறிய இதழ் போல் !!!

தேன் சுவை கனிகளும் 

தித்திக்கா சுவையற்ற

நல்நாளாய்தோற்க  

மாமன் நினைப்பு என்னை வாட்ட

அரிசியிருந்தும்  பானையிருந்தும்

மாமான்  கைகளில்லா இன்நாளில் 

பொங்கிட மறுக்கின்றது  இதயம் !!



பொங்கும் பானையாய்  உடல் 

பொங்கியே  வழியும்  மாமன்  

நினைவுகளே  கரும்பாய்

இனிக்க  தித்திப்பாய்   

நானும் பொங்களும் என்றும்

மாமன் நினைவுகளோடு !!!!



No comments: