Sunday 1 January 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 என்னை சிந்திதே என்னை

தண்டித்த ஆண்டுகளே

உங்களை கடந்த என்னை

இன்னும் வாழவைக்கும் 

எமனுக்கு நன்றி  

என்னை  எழுதி  என்னை

நானே சந்தித்து என்னை

சிந்திக்க வைத்த விதியுக்கு 

நன்றி



இல்லையென்ற வறுமை கதவை

திறந்தே வைத்தே  காவலுக்கு இருப்பதாய்  இருக்கும் நேயத்திற்க்கு நன்றி

மனிதனை  மனிதன்


கண்டுகொள்ளா

மதியை தந்த இறையுக்கும்

நன்றி

தவருகளால் அஞ்சி தவறுகளேடு

 அழுதுகொண்டே வாழமுடியா

அடிமை வாழ்வை  ஏற்கா என்

மனதிற்கு  நன்றி

காயபட்ட இதயம் தந்து காயபடுத்தும்

மனிதனை தந்து கண்ணீர்சிந்த

விழிகளை தந்தும்  கண்ணீர்சிந்தா

விழிகளான என் விழிகளுக்கு நன்றி

எடுத்துடைத்த தேங்காய் போல்

சிதறிய மனதினை கொண்டும்

புன்னகை பூவாய் பூக்கும்இதழுக்கு நன்றி 

 நோய்யைதந்து 

உடலை வருந்தும் இறைவன்

அருகே தந்த தனிமை கண்டும்

எழுந்தே போராடும்  உறுதிகொண்ட

என் உடலுக்கு  நன்றி

தெரிந்தும் நம்பி தெரிந்தே தேற்று

தெரிந்தே பட்ட காயத்தால்

உடைந்தே  விழுந்திடாமல் 

என்னை தாங்கிக்கொண்ட 

என் இதயதுடிப்பிற்கு நன்றி  

மீண்டும் கனவுகள் பூக்கா

பாலைவனத்தில் மிச்சிய சருக்குள்ளும்

ஈரம் இருக்க வைத்த என் சிந்தைக்கு நன்றி

வரண்ட காலத்து வசத்தை

இருண்ட காலம் கொண்டே சொல்ல

வரும் காலம் காத்திருக்கும்

என்னில் என்னை  திருத்திய பக்கங்கள் 

முற்று பெற்றதிற்க்கு நன்றி!!!


No comments: