Wednesday, 31 December 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

மண்வாசனைக்கரையில்
வார்த்தைதொலைத்து
வாழ்வை தேடும் வறுமைக்கு
வாழ்கைகொடுத்து
வாழயெழுந்த மனிதநேயதை!
வறட்சி கொடுத்து ஏன் மண்ணில்
புதைந்தாய் என்னிடம் சொல்லாது !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஏய்! இனிய வருடமே
உன்னைக்கண்டு என் வயதை
கண்டு! கண்டு கண்டு 
காயங்களால் வெந்து வெந்து
ஏமாற்றங்களைக் கொண்டு கொண்டு
என்னைக்கொன்று!உன்னைக் கொன்று
என்னை வென்று எழுந்திட்டேன்
உனக்காய் !கொண்டு வா  
என் துன்பங்ளை கொண்டாடிட
நான் ரொடி!!!நாளைய
கனவில்லை  கற்பனையுமில்லை
எதிர்பார்புமில்லை
என்னை வென்றிட வரும்
உனக்காய் காத்திருக்கின்றேன்
உன்னோட பயணியாய்
கண்ணீர் துளிகளை  பரிசாய் கையில்
ஏந்தியபடி!!

Thursday, 18 December 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை எரித்தது விதி
விதியை எரித்தேன் நான்
கனவை  எரித்தது  வறுமை
வறுமையை எரித்தேன் நான்
வாழ்வை எரித்தது நேசம்
அந்த நேசத்தை எரித்திடாது
சாம்பலை இட்டுக்கொண்டேன்
நெற்றியில்  !!
நேசம்  உண்மையானதால்!!

Monday, 15 December 2014

ஆதிக்கம்!!

கொத்துக்கொத்தாய்
அடிமையாகியதால்  கொத்தடிமை
கற்று ஆண்மை  கொணடவளை
அடிமையாக்கி கொண்டாடுது தான்
அடிமையாய்!!
விற்றவள் வாங்கியவள்
கொத்துக்குள் அடிமையானதால்
தேவதாசி ஆண்மைக்கு அடிமையானாள்
அடைக்களப்பொருளாய்!!
மெட்டியெலி கூப்பாடிட்டு
ஆண்மைக்கு தாழ்பால் இட்டதால்
பெண்மையின்கால்விரல்
காப்பானது காதலால்!!
கட்டுடல் களையின் காமத்திற்கு
கட்டுண்டு கருணையோடு இசைவதால்
பெண்மைக்கு இயற்கையே 
இழிநிலை கொடுத்தது
அழித்திடும் சக்தியற்று!!
பொற்காலம் பொதிகைக்குள்
புலம்பெயர்ந்தால் துள்ளியெழுந்த
பொண்மை இக்காலம் துயர்க்கரமறுத்து
தனியே வாழகற்றிட்டது!!
அப்பாடி!! அலைமோதும் ஆண்மையும்
அலைபாயும்  பெண்மையும்
தடுக்கிவிழுந்தாலும் தனித்தனியே
நிமிர்கின்றது! தவறுகள் இதுவல்லவென்று!!
ஆணாதிக்கம் பெணாதிக்கம்
                                                   எதுவெனத்தெரியாது ஆனாலும்
முப்பால் முழுப்பால்  தப்பால்அரைக்கரை
சரியாகி  இங்கே பிழைக்குள் 
கைகோர்கின்றது ஆதிக்கமின்றி!!

Saturday, 29 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நாககண்ணியிவள்
நாளும் பொழுதும்
கொண்டதில்லை கொலையாட்டம்!!
நன்மைக்குள்ளும் தீமைக்குள்ளும்
இவள் பாவங்கள் செய்யவில்லை
தன்வாழ்விற்காய்!!
 இவள் உள்ளத்து அழகில்
பலர் தேடிக் கூடியே உறவாய்
சிரித்தனர்  இவளோடு!
பாடிஆடுகையி்ல் பல கண்கள்
பாதைதேடி உயர்ந்தே நின்றனர்
தம் வாழ்வில்!
பசிகண்டு தாயாய் துடித்திவள்
கொடுத்தவுணவின் விசம்
அமிர்தமானது கைகள்பட்டு
தேடியே வழியின்றி தவிந்த இதயங்கள்
வாழவழியமைத்தாள் தான்வாழ
வாழ்கையிளும்!!
விசமாய் அவளிருந்தும்
அமிர்தமாய் வார்த்தைகள்  தொடுத்தே
வாழ்கை பாதையமைந்தாள்
பிறர்சந்தோஷதேடலில்!!
தறுகளை செய்தவர்  விசம்கண்டு
பயம்கொண்டு புலம்புகின்றனர் அவளை
எண்ணி!!எரிகின்றநெருப்பிற்குள்
அக்கினியாகம் நடத்துகின்றாள்
தன்கோவம் தனித்திட
சாப்பலில் உறங்கிடுவதற்குள்
களையெடுப்பாள் பல விசசொடிகளை
மண்ணில்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பரந்தவான் வெளியில் 
நிலவற்ற  இவள் முகம்
சிவந்ததில்லை     வலியால்!
கார்மேகவான் வெளியில்
மலரில்லா இவள் 
தோகை கலையிழந்ததில்லை
ரசனைக்காய் !
வெள்ளை மேகவான் வெளியில்
கலையிழந்த இவள் தேகம் 
ரசனைக்காய் தவறியதில்லை!!
பார்ரினில் பார்வைக்கு புரியா
 இவள்வானத்து உணர்வை  
யாரும்கண்டதில்லை 
ஓர்நாளும்!!ஆனால்
நாடகத்தால் அவள் 
பாவத்தின் பழிவாங்களில் 
கற்றுகொண்டாள் 
தன் வாழ்வின் உண்மையை
அவனால் !!!

Wednesday, 19 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கவிநடை இசைவழி
குரலோசை பாவையிவள்
கொஞ்சும் மழலை!!
மொழியழகு தனிக்கவி
பொருள்ச்சுவை தனிவழி
வனஅமைதிக் கருங்குயில்!!
கானக வானம்பாடி
மூங்கில் தென்றல் தொடும் 
 உயிரோசை
கரைபுரளா அலைவழித் தாமரை!!
நாணல் புதர் குறிமாற பசுமனம்
பாலைவன  நிழல் மரம்
நிலையற்ற மனிமனச்சாட்சி
நிலைகொள்  இதயத்தின்
உயிர்த்துடிப்பு !
நிலையற்றவாழ்வின்நிலையானநேசம்!
உடைந்தளும் வலிகளின் நேசக்கரத்துடிப்பு
நேசமற்றவர்  பொரும்தோல்வி
பொய்களின் பெருநெருப்பு
உண்மையின் அரவணைப்பு!!

Sunday, 9 November 2014

சுடர்கள்

மண்வாசனை
நந்தவனப்பூவின் உதிர்பூக்களோ!
உதிரத்தின்
 உடலாய் விளைந்திட்ட
உணர்ச்சிப்பூக்களோ!!
உள்ளத்தின்
அசைகளைஉரித்திட்டு
உவமைக்குஉயிரான
உறவுப்பூக்களே!!
வெற்றி சேதியை
 கொட்டி முழக்க திட்ட கொண்ட
தியகிகளின் ஆன்மாவின்
திகதிப்பூக்களே!!
நிலைகொள்ளஆயுள்மனிதனின்
நிலையான ஆயுள்பெற்ற
உண்மைபை்பூக்களே!!
எழுகின்ற விடுதலையை
ஏந்திக்கொள்ள  உங்கள்
ஜென்மங்கள் வேண்டுமையா1!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் இருள்
கொண்ட வாழ்வில்
நிலவொளி நான்!!
உன் மிழ்ச்சிபூக்களில்
சூரியப்பூ நான் !!
உன்கண்ணீர்துளிகளில்
அழ்கடல் மீன் நான்!!
உன் இன்பங்களில்
இதழ்ரோஜா நான்!!
உன் வலிகளில் தொட்டெழுப்பும்
தென்றலும் நானோ!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உலகதில் ஒர் பெண்ணின்
சிறப்பிற்கு!!  ஒர்
நல்ல ஆசிரியர்சிறந்தகணவரோ!!
உலகில் ஓர் பெண்ணின்
நல்ல அழகிற்கும்
சிறந்த ரசிகன் நல்ல கணவரோ!!
உலகில் ஒர் பெண்ணின்
 உயர்ந்தஅழிவிற்கும்
சிறந்த நடிகன் உ ண்மைக் கணவரோ!!

Saturday, 8 November 2014

தமிழ்ச்சுடர்......

கார்த்திகையே எழுந்திடு
ஓர் எரிதணல் காற்றாய்
அக்கினிதாண்டவமாடிட
கார்த்திகையே எழுந்திடு!!
 
சிதையுண்ட சிதைகளை
சேமித்தவர் சிதையாது
சிறந்திட ஒர்வழித்துணையாய்
கார்திகையே எழுந்திடு

தீபந்தங்களை சேகரிக்கும்
தீபக்காற்றே தமிழ்நெஞசத்து
நெஞசாங்கூட்டிற்குகள்
அணல்நெருப்பினை ஏற்றிட
கார்திகையாய் எழுந்திடு

அழிந்த ஆன்மாவின்
அழியா விடுதலைத்தீபமே
பொழிந்த கண்ணீர்மழையிலும்
நணையா தீபமாய் பரந்ததேசந்து
கனவினை  எடுத்துச் சொல்லிட
அணல் காற்றாய் எங்கும் பரந்திடு!!


Thursday, 6 November 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உலகத்தைவென்றிட
நீ எடுத்த உண்மையற்ற
தன்மைகள் உன்னை அழித்திட
உன்னை  காக்கின்றது இப்போது
உண்மை உடையுவரை நீ
சிறந்தவன்  மறவாதே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,



உன்னை நேசித்த என்
இதயத்தையே வெறுக்கின்றேன்
உன்னால் !!
என்னைக் கல்லென்று
 திட்டினாலும் கவலையில்லை
உன் நினைவுகளை சுமக்கும்
என் இதயத்தின் வலிகளை விட
என்  உடலுக்கு மரணமே  சிறந்தது
உன்னை விட என்பதால்!!!!

Saturday, 1 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மலர்கள்தந்தகாதல்
புன்னகைக்கும் இதழ்கள்
புல்வெளி தந்தகாதல்
கால்தழுவும் பனித்துளிகள்
தென்றல் தந்தகாதல்
தலைசாய்க்கும் வசந்தங்கள்
மழைத்துளிதந்தகாதல்
விழிமின்னும் மின்னல்ஒளிகள்
குழந்தை தந்தகாதல்
சுமைமறந்தநேசச்செண்டு
மனிதன் தந்த காதல்
காலம்அழித்த பலகதைகள்
ஒருவன் எழுதும் காதல்
எழமுடியா இயவலி
ஒருத்தி இழந்த காதல்
உயிரோடு எழுப்பிய வர்ணச்சமாதி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 இதயதின்
சுமைதாங்கா பாவையிவள்
தனியேநின்றாள் தன்னையே
தரித்திரமாய் எண்ணியே!! 

சுமையென எண்ணியவன்
சுமந்திடஆசையின்றி பாலைவனதில்
ஒர் பச்சைவர்ண நாடகத்தால்
பலியெடுத்து தீயிட்டுபகைமுடித்தான்
 தன்திறமையால்

Wednesday, 22 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிகளைகொட்டிய
இறையே உனக்குகோர்
தீபம்!!
ஏமாற்றங்களை கொட்டிய
 இறையே உனக்கோர்
தீபம் !!
கரத்தினை வெட்டிய
இறையே உனக்கோர்
தீபம் !!
கருணையின்றி பழிவாங்கிய
.இறையே உனக்கோர்
தீபம்!ஒளியாய் தருகின்றேன்
உன்கண்ணின் இருளுக்கு!!

தீயாத்தீபத்திருநாள்

மனதிற்குள் ஆயிரம்
அழுக்கும் குப்பையும்
அழியாது இருப்பதை
அழிந்திட வந்திடும்  ஒளியே!!

அடுத்தவர்சொல்லும் செயலும்
 புரியாதுஇருப்பதை ஒர்நாளேனும்
புரிந்திட வைத்திட அழியாது
வந்திடும் ஒளியே!!

 இருப்பதைத் தொலைத்து
எடுப்பதை எண்ணி இருப்பதை
விட்டு அழுதிடும் இதயங்களை
சிரிந்திட வைத்திட வந்திடும் ஒளியே!

ஆன்மீகஅறிவை அறியாது
தொழிநுட்பறிவாள் தடுமாறி
தடையானவரை தடுத்திட
தடைபடாது தொடரும்ஒளியே!!

இல்லதின் ஒளியாய் உள்ளத்தின்
வழியாய் உறங்கிட்ட பாசத்தை
உயிரோடு எழுப்பிட  எழுந்திடும்
ஒளியாய்யெழுந்திட்ட ஒளியே!!

இறந்துகொண்டே வாழும்
மனிதநேயத்தை உள்ளத்தில்
எடுத்து!!பணயிந்திரமனிதனை
இல்லத்திலாவது கொட்டாடிட
கொண்டாடிடும் தீபஒளியோ!

எதிர்பவர் இயத்திலும்ஒளிர்த்திடு
நல்லெளியாய்!!



Tuesday, 21 October 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

பெண்மையின் பலவீனங்களால்
ஒரு கூட்டம்
பேச்சாளர்களாய் உயர்கின்றனர்!
பெண்மையின் பலவீனங்களால்
 ஒரு கூட்டம்
எழுதாளர்களாய்  உயர்கின்றனர்!
பெண்மையின் பலவீனங்களால்
ஒரு கூட்டம்
வீரனா  உயர்கின்றனர்!
பெண்மையின்பலவீனங்களால்
ஒரு கூட்டம்
வாழ்வின்சுவையோடு  சாமியாய்
உயர்கின்றது !! உயரந்து உயர்ந்து
பெண்ணிற்குள்ளோ சுற்றி பெண்ணாலே
வாழும் தியாகிகள் பெண்மையின்
பலவீனங்களாலே சிறந்து வாழ்கின்றனர்!!!

Friday, 17 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

துளிகள் ஏனோ கண்கள்
விடுவதுதான் ஆனால்
வலிகளைக்கொடுப்பது ஏனோ
நேசிக்கும் இதயம் தானே!

Wednesday, 15 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எதையோதேடி
எதற்காகவோ
பொய்கள் சொல்லி
 என்னிடம கேளாது
எதையோ அறிந்து
இதயதில் ஓர்வலியை அறியாமல்
கொட்டி  காதல்கண்களில் 
இருந்தும் ஏன்
கண்ணின்மணிதொலைத்தாய்

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு மரத்தை  அழித்திட
ஒரு தோப்பை குறைகாண்கின்றான்
ஒரு தோப்பை அழிந்திட
ஒரு மரத்தை குறைகாண்கின்றான்    
மனிதநேயத்தால்!!

Saturday, 4 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எழமுயல்கின்றபோதெல்லாம்
மரணதின்வலியறிகின்றேன்
வாழ்வில்!!
தடைகளை கடந்திட 
முயலும்போதெல்லாம்
மலைகளோ தடையாக 
நிமிரக்கண்டேன்
வாழ்வில்!!
ஊமையைாய் 
அழுகின்றபோதெல்லாம்
கேலிசிந்திரமாய் 
வரையக்கண்டேன்
வாழ்வில்!!
தனிமையை உடுத்திடும் போதெல்லாம்
வேப்பங்காயாய் வாழ்வு  கசந்திடக்கண்டேன்
வாழ்வில்  !!

குட்டிக்குட்டிச் சாரல்......,



வலிகளைத்திண்று
பசிமறந்தேன் தன்னால்
வறுமையைதிண்று

கனவினை மறந்தேன் உன்னால்
கற்பனையைத்திண்று

இளமையை மறந்தேன் விதியால்
என்னைத் திண்று
உயிரைமறந்தேன் இறையால்

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ எறிந்திட்ட
பந்தைப்போல் துள்ளியோடிய
வாழ்கை
 யாரோ தவறவிட்ட
கண்ணாடியைப்போல்
உடைந்துசிதறியது அடையாலமின்றி!!

Friday, 3 October 2014

நினைவஞ்சலி


நீதிவழிக்காவலனாய்
கடமைவழிநாயகனாய்
தரணியில் வாழ்ந்தவரோ! இங்கே
என் இல்லது நாயகனாய்
என்னைச்சுமந்தவரோ! இப்போ
எங்கே ஐயோ போனீர்!

எங்கள் அன்பிற்கோர் மடியாகி
பண்பின் வழிகாட்டியாய்
வாழ்வின் வழித்துணையாய்
கண்ணின்மணிபோல்
இன்பம்தந்து சுமந்தவரோ !இப்போ
எங்கே ஐயாபோனீர்

நாணயத்திற்கும்  நாயத்திற்கும்
சொல்லுக்கும் செயலுக்கும்
ஒற்றை அர்தமென்றை எம்மிடத்தில்
கற்றுதந்திட கண்டிப்பென்றை
கவசமாய் காத்து நடந்தவரோ !இப்போ
எங்கே ஐயாபேனீர்

எம் கருணைக்கண் திறந்து
கடவுளின் முன்நின்று
நரகத்தின் வழியமர்ந்து
சொர்கமே உம்மை தேடியழுகின்றோம்
எங்கே ஐயா போனீர்!



Saturday, 6 September 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நெஞ்சதில் நெருஞ்சி்
முற்களை யாருரோ எறிந்த
வலிததந்தாய் பெண்ணே
எனக்கு!
அன்று என்ஆடையில்
விழுத மஞ்சல் கறைகள்
இன்று உன் ஆடையிலும்
விழுந்திடக்கண்டேன் பெண்ணே!

மனதிற்கு போட்ட கறுப்புத்துணி
உன் கண்ணீரால் நனைத்து
விழுந்தடி தாங்கிட முடியாது!!
யாரோ புதைத்த வாழையானவள்
நீரைத் தாங்கி நீரால் சொழித்திட
முயலுதடி !
அழுகிவிடா அளுக்கினை கொட்டிய போதும்!!!



கண்ணீர் அஞ்சலி

அழ்ந்த உறக்கத்தில் கற்சிலையாய்
உம் உருவம் கள்ளமின்றி படுத்திருக்க
பதறித்துடிக்குதையா எம் இதயங்கள்
உம்மையிழந்து

அள்ளி நிறையா நிறைகுடமாய் கண்கள்
உன் மீதுகொண்ட அன்பால்  நீரை
தழும்பி வடிக்குதையா உம்
பிரிவை ஈடு செய்திட முடியாது

ஆற்றிடா துயரமதை ஆற்றிட
ஆறுதல் தேடிய  எம்மோடு
உம் கரம்பிடித்து உம்நினைவுகள்
அலையாய் மேயெழுப்பி அணைத்து
தவிக்குதையா எம்மோடு

விழுந்தவேரில் தோன்றும் விருட்சத்தில்
நாளைய உம் கனவுகள் நிலைத்திட
கரம் கூப்பி தொழுகின்றோம் உம்
ஆத்ம சாந்திக்காய்!!!

Friday, 29 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உதிர்க்கும் வரை
அழகு தெரியவில்லை
 மனசிற்கு!
எல்லாம் உதிர்ந்த பின்னர்
வலிகள் புரியவில்லை
மற்றவர்க்கு1!  எல்லம்
புரிந்தபின்னர்  வாழ்கையில்லை
என்னிடம் !!ஆண்டுகள்
தொலைத்தும் அழியவில்லை
ஏமாற்றங்கள் மட்டும் எனக்கு1!

Wednesday, 27 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதல்ரோஜாவின்
காதல் மலர்க்கொத்தை
காதல்கொண்ட காதலன்
வேர்ரறுத்தான் வெண்ணீரால்!!
காயப்பட்டு இதழ்கருகிய
ரோஜாவின்  இதழ்கள் மண்ணில்
உதிர்த்த வாசத்தின் வணர்ணங்களாய்
விண்ணில் மலர்ந்தது வானவில்லைப்போல்!!

Monday, 25 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாலியென்று ஏறிடாததால்
ஓர்வலி
தாலியென்று இறங்கியதால்
ஓர்வலி
தாலியென்று ஏறமறுத்தால்
ஓர்வலி
தாலியென்று கனவானதால்
ஒர்வலி
தாலியொன்றே வலிகள் தான்
பல!!

Thursday, 14 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரற்றுப்போன
உயிரின் உன்னதத்தை மகனே
நீ சுமந்திடயெழுந்திட்ட போது
ஆதரவற்று நின்றனான்
 பொருள் உணர்கின்றேன்
 உன்னால்!!

Wednesday, 13 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உனக்குதெரியா    உன்
நாணயத்தை எடுத்தவள்  உன்
நாணயத்தைபோல் காதலையும்
 சுமகின்றாள்  நெஞ்சுக்குள்
உன் நினைகளில் தொலைந்து
சென்றவள் !உன்
 நினைவலைகளிலேவாழ்கின்றாள் 
உன்னோடு!!

Tuesday, 12 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனை வீட்டுக்கள்
பொய்யான உறவுக்குள்
தரைதட்டிய தடாகத்தின்
கண்ணீருக்குள் வேர்ரற்ற
ஆம்பல் காத்திருக்கு உதயமின்றி
காயங்களும் வடுக்களும்
அடுத்தவர் அறியா இருளின்சிறை
புன்னகைமுகமாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் உணர்வுக்குள்
ஒரு காதலை  !உயிராய்
எழுதி ஊமையாய்வாழாது
உனக்கான உயிருக்குள்
உணர்வாய் எழுதி உண்மையாய்
வாழ்ந்து பார்!
அதன் நினைவுகள் சேர்த்திடும்!
உன்னோடு!!

Sunday, 10 August 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

என்னைத் தொலைத்தநிமிடம்
உன்னைக் காணத் தவித்த
நிமிடம்!
எனக்குள்தாய்மை  வந்த நிமிடம்
 நீ மலராய் மலர்ந்த
 நிமிடம்!
என்னை மறந்த நிமிடம்
நீ என்னைப் பிரிந்த
நிமிடம்!
நான் இறந்த நிமிடம்
நீ யில்லா வாழ்வை
வாழமுடியால் தேற்ற
 நிமிடம்!


Saturday, 9 August 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


நம் வலிகளினால் 
உறவைத்தெலைத்து
உலகை மறந்தேன்!!
நம்  வலிகளில்
உன்னைத்தொலைத்து
என்னை மறந்தேன்!!
பிள்ளையின்  வலியால்
கல்லாய் சமைத்து
உயிரை மறந்தேன் !!இன்று
முல்லை அருப்பு
கொஞ்சி சிரிக்க
 புதிதாய்உணர்வு
என்னுள் கண்டேன்!!
இருந்தும் தனிமைக்காயம்
எழுதியதீர்பில்அன்பின்
 ஏக்கம்  இழந்தவலியை
உணரக்  கண்டேன்!!
முதல்முறையிவ்வுலகில் 
நீயிலையென
உணரக்கண்டேன்!!
உணர்வு பேசமொழிகளால் 
மெளனமனேன்    உன்னால் !!! 

Wednesday, 23 July 2014

ஹைக்கூ... கவிதைகள்,

இல்லத்த  மகிழ்ச்சிக்காய்
  தலைவன் பக்கத்துவீட்டுப்பாட்டியை 
வைப்பாட்டியாக்கினான் !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஏமாளிபெண்ணிவளை
ஏமாற்றி ஏமாற்றம்
தந்தவனே!!
சோகத்தின் பள்ளதில்
ஓடிடமுடிய குழிக்குள்
மரணத்தின இருக்கையில்
இலையுதீர் காலமானேன் உன்னால்!!

பென்னுமில்லை பொருளுமில்லை
அள்ளிக்கொடுத்திட உனக்கு
அறிவுமில்லை அழகுமில்லை
ஏமாற்றியெடுத்திட எனக்கு!!
வசத்தின் வாழ்கை தனை
பற்றிய பின் நானிருந்தால்
அப்போது பார்ப்போம் அன்பே!



Tuesday, 22 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆனந்தத் திருநாளாம்
அர்தமற்ற பெருநாளாம்
ஆளுமையற்றவர்
கூடிபேசி கொண்டாடும் நன்நாளாம்
ஆண்டைத்தொலைத்து
ஆளுமையானது இதயமதில்

Wednesday, 16 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

தமிழ் வார்தை
நீயானதால்

அதையெடுத்து

நான் படைத்தேன்
கவிதை! தமிழுக்காய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதய சாந்திதொலைத்து
தொலைத்த சாந்தி
தேடி
கோவில் சென்றான்
சாந்தி வேண்டி..
அங்கு வந்த தேவதை கண்டு
தன்னை தொலைத்து
சாந்தம் கொண்டான்  தனக்குள் !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் முதல் கவிதை நீ
என் முதல் ரசனை நீ
என் முதல் உறவு நீ
என் முதல் மகிழ்ச்சி நீ
என் முதல் காதல் நீ
என் இறுதி காதலும் நீயோ!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் உள்ளத்தின் மென்மை அழகு
உன் உட்டில் சிரிப்பழகு
உன் பொய்யில்ல சொல்லழகு
உன் கோபத்தில் கண்ணமழகு
உன் பொறுமைக்கு நீயழகு
உனக்கென்றும் நான் தான் அழகு!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கூடத்தான் ஆசை
என் அன்பே!!

உன் நெஞ்சமென்னும்
கூட்டில் உன்னோடு
கூடத்தான் ஆசை
ஆனாலும் கூடத்தான்
ஆசை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

விழியுறங்கா வீழ்கரை விடியலின்
விழியுறக்கம் நீயேயானாய்!
மொழியில்லா தழிழுரை ஊமைக்கு
முகத்திரை  நீயேயானாய்!
விதிகுழிவீழ்கரை
வழித்துணையில்லா இருள்கரைக்கு
வழியோரக்கயிறு நீயேயானாய்!!
கருவிதை சிதை தாமரை
வெண்கரை வீழ்தரை மணலேரக்கரை
தென்றலும் நீயேயானாய்!!
பெருத்துயர் பாவக்கரைத்துளிக்கண்ணீர்
வழியகம் சிதையறம் சிதையா
திருமுகமேனாய் நீ.........

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

திங்கள் முகம் கோவையிதழ்
செம்மொழிப்பாவை
செந்தமிழ்மொழிபேச்சு!!
அச்சுவெல்லப்பார்வை
அனிச்சமலர் நாணம்
கொஞ்சும்குரலோசை
முல்லை மலர்மனசு!!
 தங்கம்வென்ற வெண்பாவை
இல்லம் வந்து சொர்கம்
தந்து  உள்ளம்வென்று
உயிராய்யானாள்மாமான்
நெஞ்சுக்குள்!!
 கொஞ்சுமொழிகேட்டதில்லை
கூடிபேசிப் பார்ததில்லை
அச்சியோடும் புள்ளிமானாய்
 உள்ளத்து ராகத்தை இல்லதின்
ஓசையாக்கிளால்!!
வையகத்து புதுமைப்பெண்ணும்
கொஞ்சம் கற்றிடிட வேணுமடி
இல்லத்து தத்துவதையிவளிடம்!!
வெட்டிவிட்டு கொட்டிவிட்டு
என்னவின்று தெரிய சின்ன வாழ்விற்குள்
 இல்லத்துஒளியின் தொடர்கதையானவள்
இவளோ!!




Tuesday, 15 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எங்கே விழுந்தேன்
எதைதொலைத்தேன்
எதற்காய் இந்தனை வேலிகள்
எதையிழந்தேன்
எதையெடுத்தேன்
ஏன் இந்தனை சோங்கள்
மாறுமா மாற்றுமா
கூடுமா கூடோடு போகுமா
இல்லை  கனவே வாழ்வாய்
மறையுமா?...





விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

காத்திருந்தேன் இசையாய்
மலர்ந்திருந்தேன் உனக்காய்
ஏனோ!! நீ
இல்லாததை புரியாமலே!!
வாழ்கை நாடகம்
 என புரிந்திட்ட போதே
 மற்றவர் பொய்கள்
என்னை தட்டியெழுப்பி
உன் கல்லறைக்குள் தள்ளியது
இப்போது பொய்யான என் நடிப்பிற்கே
ஆயிரம் ரசிகர்கள்!!!


Monday, 14 July 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வியாதிக்கு மருந்து தேவை

தீர்வு கண்டால்  தேவையற்றது
ஆனால்!!
மருந்தாய்  நீ இருந்தால்
வியாதிக்கு  புரியாது
அதன் தன்மை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வெற்று வானத்தில்
ஓடும் கார்மேகம்
கண்ணீர் மழையாய் பொழிய
தென்றல் பட்டு
களைந்த இன்பக்கனவுகள்
எங்கே சந்தோஷமழையாய்
பொழிய!
கலையிழந்த வானத்தின்
வர்ணஒளி 
நீயேயாய் தோன்றி
அன்பின் மேகமாய்
 மேதியதில் நம் 
இதயச்சத்தில் உருவான
இடியும் மின்னலும் என்
வானத்தில் நட்சத்திரங்களை கூட
சிதைத்திட்டது
வெறுமையான வானத்தில்
அங்கும் இங்கும்
கண்ணீர் மழையே
நிற்காது ஓடுகின்றது!!