Friday 3 October 2014

நினைவஞ்சலி


நீதிவழிக்காவலனாய்
கடமைவழிநாயகனாய்
தரணியில் வாழ்ந்தவரோ! இங்கே
என் இல்லது நாயகனாய்
என்னைச்சுமந்தவரோ! இப்போ
எங்கே ஐயோ போனீர்!

எங்கள் அன்பிற்கோர் மடியாகி
பண்பின் வழிகாட்டியாய்
வாழ்வின் வழித்துணையாய்
கண்ணின்மணிபோல்
இன்பம்தந்து சுமந்தவரோ !இப்போ
எங்கே ஐயாபோனீர்

நாணயத்திற்கும்  நாயத்திற்கும்
சொல்லுக்கும் செயலுக்கும்
ஒற்றை அர்தமென்றை எம்மிடத்தில்
கற்றுதந்திட கண்டிப்பென்றை
கவசமாய் காத்து நடந்தவரோ !இப்போ
எங்கே ஐயாபேனீர்

எம் கருணைக்கண் திறந்து
கடவுளின் முன்நின்று
நரகத்தின் வழியமர்ந்து
சொர்கமே உம்மை தேடியழுகின்றோம்
எங்கே ஐயா போனீர்!



No comments: