Wednesday 19 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கவிநடை இசைவழி
குரலோசை பாவையிவள்
கொஞ்சும் மழலை!!
மொழியழகு தனிக்கவி
பொருள்ச்சுவை தனிவழி
வனஅமைதிக் கருங்குயில்!!
கானக வானம்பாடி
மூங்கில் தென்றல் தொடும் 
 உயிரோசை
கரைபுரளா அலைவழித் தாமரை!!
நாணல் புதர் குறிமாற பசுமனம்
பாலைவன  நிழல் மரம்
நிலையற்ற மனிமனச்சாட்சி
நிலைகொள்  இதயத்தின்
உயிர்த்துடிப்பு !
நிலையற்றவாழ்வின்நிலையானநேசம்!
உடைந்தளும் வலிகளின் நேசக்கரத்துடிப்பு
நேசமற்றவர்  பொரும்தோல்வி
பொய்களின் பெருநெருப்பு
உண்மையின் அரவணைப்பு!!

No comments: