Saturday 8 November 2014

தமிழ்ச்சுடர்......

கார்த்திகையே எழுந்திடு
ஓர் எரிதணல் காற்றாய்
அக்கினிதாண்டவமாடிட
கார்த்திகையே எழுந்திடு!!
 
சிதையுண்ட சிதைகளை
சேமித்தவர் சிதையாது
சிறந்திட ஒர்வழித்துணையாய்
கார்திகையே எழுந்திடு

தீபந்தங்களை சேகரிக்கும்
தீபக்காற்றே தமிழ்நெஞசத்து
நெஞசாங்கூட்டிற்குகள்
அணல்நெருப்பினை ஏற்றிட
கார்திகையாய் எழுந்திடு

அழிந்த ஆன்மாவின்
அழியா விடுதலைத்தீபமே
பொழிந்த கண்ணீர்மழையிலும்
நணையா தீபமாய் பரந்ததேசந்து
கனவினை  எடுத்துச் சொல்லிட
அணல் காற்றாய் எங்கும் பரந்திடு!!


No comments: