Sunday 5 August 2012

நட்பு





பொய்யில்லாக்கயிறு கட்டிக்கொள்ளும்
பொய்யின் இலக்கணம்
தொட்டுப் பிடித்து நிக்கின்றது
உறவைத்தொலைத்தும் உறவை விட
நட்போ பெரிதென்று!!

விட்டுக்கொடுத்து வீரியம் பேசி
விதை போல் நித்தம் நித்தம்
முளையிட்டு 
சொந்தமில்லா சொந்தங்களை
இதற்குள் செந்தமாய் சிறைபிடித்து
என்னவென சொல்லத்தெரியது
நிற்கின்றது நட்போடு!1
எத்தனை இருந்தும்
 அந்தனையும் இதற்கள் 
தேடிக்கொண்டு
 அதனையோ வேண்டுமென்று 
விட்டுப்பிரிந்தும்
பிரிய முடியாது தேடுது
 நட்பை மட்டும்!!
கருணையும் கடவுளும்
 அன்பும்அரவணைப்பும்  
நல்லதும் அர்ப்பணிப்பும்
இதற்குள் மட்டுமேயுண்டென்று
நட்போடு வந்த உயிரை 
 உறவாய் ஏற்றுக்கொண்டு 
உன்னதம் இதற்குள்
சொல்லும் நட்பிற்கு 
ஏன்னிந்த தனியுலகம்!!
உறவுக்குள்ளும் நட்பிருந்தால்
உறவு கூட சிறப்பு தான் நட்போ!!
தந்தை கொடுக்கா நட்பு!
அன்னை சொல்லா நட்பு 
!கணவன் காட்டா நட்பு!
மணைவி  இழந்த  நட்பு!
பிள்ளளையை பின்னிடா நட்பு!
நட்பை தேடுது வெளியே தனியாய்
 நட்பபே சிறப்பொன்று!!!!

No comments: