Saturday 29 September 2012

பனிப்பூ

வானமும் மண்ணும் பனியும் மழையும்
பாறையும் கடலும் பறவையும் விலங்குகளும்
புல்லும்  செடியும் பூவும் மெட்டும்
அலையும் கரையும் கானமும் இசையும்
கரையும்  மனதை தொட்டொடுத்து
வார்தொடுத்து  வார்த்தெடுத்து
விட்டிடாது பிடித்து கற்று தந்த இலக்கணம்
 சொல்லாது என்னாலும் என்னோடு
விளையாடும் காதலின் 
 இலக்கணம் தான்!!

எல்லாமே என்னோடு காதல்கொண்டாலும்
 உன்மீது பட்டு என்மீது வந்த காதல்என்ன?

 எண்ணி எண்ணிபார்க்கிறேன்
உன் நினைவுகள் என்னுள்  உருண்டு
புறன்டு உணர்வுக்குள் பறந்து
 சொல்லுது இதை தான்காதலென்று !!

எதற்க்காவும்  காத்திருக்கா இதயமது
காத்திருக்கு காத்திருக்கு உன்மொழி கேட்க!!“
பூ த்திருக்கு பூத்திருக்குஉன்னோடு பேசிட!!
 காலம் கடந்தும்உன்னோடு வாழ்ந்திட 
 இயலாதவாழ்வாகி போனபின்பும் 
முட்டாள் பெண்ணென்றுமுனுமுனுக்கும் 
சத்தங்கள் காதில் விழுந்தபோதும்
காத்திருக்கு கத்திருக்கு எதற்கென தெரியாமலோ!!!

இலக்கியத்து காதலை இலக்கணமாய்
எடுக்கவுமில்லை தொலைக்கவுமில்லை
இல்லா ஒன்றிற்காய் தவிக்கவுமில்லை
இருந்தும் அவை இதயதிற்குள்
 உண்டென்ற அறிவால் கொஞ்சம் துடித்து
கொஞ்சிபோகும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாய்
கரைத்து  காத்திருக்கு காத்திருக்கு
உன்னை எண்ணியோ!!

No comments: