Friday 2 November 2012

கனவு

எட்டி எட்டி பார்க்கின்றேன் எங்கோ 
தொலைந்த கனவினை கொஞ்சம் 
அள்ளிக்கொண்டு நடைபோட  
ஆனாலும்!கொஞ்சமும் அச்சமின்றி
நட்டநடுவான் நட்சத்திரஒளிபோல்
விட்டுவிலகிய கனவுகள்அப்படியோ 
நிக்கின்றது என்னைத் தள்ளிவிட்டு!!

அழிந்தொழிந்த கனவுகளை
கூட்டி க்கூட்டி பார்கின்றேன்
கொஞ்ச நாள் நான் வாழ
எங்கிருந்தோ வந்து போகும்
தொன்றல் சுழன்று போகையில்
அத்தனையும் சிதறவிட்டு
வெற்றுக்கைகளாய்
 மீண்டும் திரும்புது என்னிடத்தே!!“

குட்டிஇதயமதில் கொட்டி வைத்த
கனவுகளை  தட்டித் தட்டிப்பார்க்கின்றேன்
கொஞ்ச உற்சாகத்தை கட்டிக்கொள்ள
கட்டிக்காக்கும் சிந்தனை தடடிவிட்டு
போகின்றது அந்தனையும் மறந்திட்டதாய்!!

எந்தனையோ கற்றாலும் எந்தனையோ
நினைத்தாலும்  அந்தனையும் கூடிடாது
பலமிழந்த மனசு ஏனோ
என்னை சுற்றி சுற்றி வந்து
 இதயமதை உடைக்கின்றது
கனவிற்காய்!!!!!!!!!!

No comments: