மண்ணைத் தொலைத்திட்ட
இதயங்களே !கொஞ்சம் நாம்
தாய்மண்ணையும் சிந்தித்தால் தான் என்ன?
உறங்கியே வாழும்
இதயங்களே! கொஞ்சம்
மண்ணுக்காய் விழித்திட்டால்
தான் என்ன?
அறம்பாடும் இதயங்களே!
கொஞ்சம் அல்லல்படும்
தமிழுக்காய் பாடினால் தான் என்ன?
இறைபாடும் இதயங்களே!
மனிதஇயங்களில் கொஞ்சம்
அன்பையும் தூவினால் தான் என்ன?
தமிழ்பேசும் இதயங்களே!
கொஞ்சம் தமிழுக்காய் வாழ்ந்து
பார்த்தால் தான் ஏன்ன?
ஆண்டுக்கு ஒருமுறை அழிந்ததை
நினைக்கும் இதயங்களே!அப்பப்
கொஞ்சம் மாண்டு போனதை
நினைத்தால் தான் என்ன?
தன்னைக்காக் தனக்காய்
மண்டியிட்ட இதயங்களே!
கொஞ்சம் மண்ணுக்காய்
தலைநிமிர்ந்தால்தான் என்ன?
வாழ்விழந்து வழியிழந்து
வாழயிழது தவிக்கும் இதயங்களே!
கொஞ்சம் இழந்ததை நினைத்து
எழுந்தால் தான் என்ன?
அது இது எதுவெனத்தெரியா
இதயங்களே!
எல்லாம் எம் விதடுலையென
கூடிவாழ்ந்துவென்றிட எழுந்தால் தான் என்ன?
No comments:
Post a Comment