Wednesday 16 May 2012

சக்காலத்தி

அக்காளின் கணவருக்கு
அக்கரையாய் ஒர் பாசம்
அக்காவிற்கு தெரியாது
வந்தால்!!
தற்காலம் அக்காளிடம்
தங்கை சக்காலத்தியானால்!!!

 முக்காலம் இக்காலம்
எக்காலும் போனாலும் ஓர் உறவு
பெண்ணிற்கு இப்படியொரு பெயராய் 
எப்படித்தொடருது!!!
இல்லாத பொல்லா கனவில்
நில்லாது மிதப்பதாலா!!

சொல்லாது வந்த பொல்லாத
காதல் நில்லாத உணர்ச்சியை
கொள்ளாது கொள்வதாய் பொல்லாத
உணர்விதற்கு .இல்லாத கதையை
கொஞ்சம் கல்லாத மனம் சொல்வதாலால!!
நில்லாது வடிக்கும் பொல்லாத கருணையால்
அக்களும் தங்கையும் எதிரியாய் மாற்றிவிளையாடும்
விளையாட்டின் அர்தம்புரியவில்லை !!

அத்தனையும் செய்துவிட்டு
அப்பாவி வேஷமிட்டு அக்கரையாய்
நிற்கும் அத்தானின் மனதிற்குள்
அந்தனையும் பொய்யாய்யனதாலா!!
உணர்ச்சியை  தவிப்பாக்கி உண்டுவிளையாடி
உண்டிட்டு  கல்லாய்நிற்பது தான் ஆண்மையா .,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments: