அழகானதோர்ரிடம்
அமைதியான வாழ்வுதனில்
பணமில்லாதவரோ!மனிதராயுண்டு !!!
தேடியோடாகால்களுண்டு
தட்டிப்பறித்திடா கைகளுண்டு
ஒலிகள்கேட் காதுண்டு
மொழிகள் பேசாவாயுண்டு
அமைதியான மனதுண்டு
துடிப்புணரா இதயமுண்டு
சோகமில்லா அகமுண்டு
கண்ணீர் சிந்தாக்கண்களுண்டு
கருணையுள்ளோர் மலர்களுண்டு
கவிதைகளின்மொழியுமுண்டு
இரவுமுண்டும் பகலுமுண்டு
கல்லுக்குள் வீடுமுண்டு
கனவில்லா உறக்கமுண்டு
பொய்யில்லா முகங்களுண்டு
தவிப்பில்லாதனிமையுண்டு
உயிரற்ற காற்றுண்டு
உண்மைகள் இங்குமட்டுமுண்டு.....................
No comments:
Post a Comment