Saturday 15 September 2012

பராசக்தி


காணியுண்டு நிலமுண்டு மனிதனுண்டு
பண்படுத்த மட்டும்வேணுமடி பராசக்தி

தமிழுண்டு தமிழனுண்டுமண்ணுமுண்டு
காத்திட மட்டும்வேணுமடிபராசக்தி!!

கலையுண்டு கலாச்சாரமுண்டு
காவலுமுண்டு வளர்த்திட மட்டும்
வேணுமடிபராசக்தி!!“

ஆணுமுண்டு பெண்ணுமுண்டு
தாலியுண்டு வேலியுண்டு பூவுமுண்டு
பொட்டுமுண்டு புரிந்தவர் மட்டும்
வேணுமடி    பராசக்தி!!!“

குடும்பம்முண்டு குலமுண்டு
குத்துவிளக்குமுண்டு அன்பின்ஒளி மட்டும்
வேணுமடி பராசக்தி!!

இதயமுண்டு இரக்கமுண்டு உழைப்புமுண்டு
 உதவிடும்கை மட்டும் வேணுமடி பராசக்தி!!!

படிப்புண்டு பதவியுண்டு உயர்வுமுண்டு
 ஓழுக்கம் மட்டும் வேணுமடிபராசக்தி!!!

இன்பமுண்டு துன்பமுண்டு  சுமையுமுண்டு
சுப்பரின்தோலில் தூங்கிடாதவர் மட்டும்
வேணுமடி பராசக்தி!!!

No comments: