Thursday 15 November 2012

தீபாவளி

பட்டுண்டு பாவாடையும்ண்டு
வேட்டியுமுண்டு சட்டையுமுண்டு
விதவிதமாய் உடைகளுமுண்டு 
ஆனாலும்
                                                                 அணிந்திடாத் தீபாவளி
கோயிலுண்டு வசதியுண்டு
ஆறுகாலபூசையும்முண்டு ஆனாலும்
 அங்கே போகமுடியா தீபாவளி
அரியுண்டு மாவுண்டு சீனியுண்டு
நெய்யுண்டு பக்கத்தில்வீடுமுண்டு
 ஆனாலும் விதம்விதமாய்
பலகாரம்செய்திடாத்தீபாவளி
அன்னையுண்டு தந்தையுண்டு
பிரிந்த போதும் கையோடு
 தொலைபேசியும்முண்டு ஆனாலும்
 வாழ்த்திட முடியாத் தீபாவளி
கணவருண்டு பிள்ளையுண்டு
ஒரு பொழுது கூடியுண்ண நேரமில்லா
வாழ்வும்முண்டு இருந்தபோதும்
மீட்கமுடியா நேரத்தை வாழ்த்தி
ஓய்வாக்க வந்திட்ட தீபாவளி
அன்பை பறிமாறிட முடியாது
போனது தேசமற்ற மனிதர்க்கு
விடுதலையின்றி............



No comments: