Thursday 19 July 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


                                                    என் உயிர் மொழி.......


மலரொன்று பிறந்திறந்து
ஆண்டுகள் கடந்தும் அதன்
அழியா  நினைவுகளை
மெல்ல சேர்த்தெடுத்த
தேய்பிறைக் காற்று
வளர்பிறைத் தென்றல் தெட்டு
முழுநிலவாய் அவளை வரைய!!
ஒளியாகி ஒவியமாகி நிலவாய்
சிரிக்கின்றாள் என்கனவை
ஆண்டுகொண்டு
கோடைகாலத்து காற்று
வசந்த காலத்து தென்றல்
தொட்டு ரோஐா மலர் எடுத்து
மாலையாகி சூடியதால்
இன்று மட்டும் உயிர்பெற்றாள்
என் கனவில் !!இல்ல உலகமதில்
நில்லாத அவள் முகம் எப்பவும்
அழியா ஒவியமாகியது என் விழியில்………

No comments: