Thursday 19 July 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

                                                                      கலையே!!!


என் கனவில் வந்து
என் கண்ணீர் துடைத்து
என்னைக்காப்பவளே  !நீ
மண் மரணிக்க விண்ணுக்கு சென்று
ஆண்டுகள் கடந்தும் அழிய வரமாகி
எனக்குள் ஏன் வாழ்கின்றாய் !!
நான் மண்ணில் இறந்து
உயிரில்லா உடலாகி நரகதின்
வாசலில் எரிக்கும் தீக்காய்
காத்திருப்பவள் என்பதாலா!! இல்ல!!
உயிரற்ற உடலெடுத்து
இதயமதை அறுத்தெறிந்த
பொய்யான முகங்களின்
புன்னகையும் பாசமும் என்னை
அழித்திடுமென்பதாலா!!!
இருக்கும் வரை பெண் வாழ்வே போராட்டம்
எதைக் கொண்டு
மாற்றுவது பாருக்குள் என்பதாலா!!
இல்ல கற்பனைகள் கவி பாட
நீ சொல்லிடா காமதிற்காய்
அவளை தேடியழித்து முற்சந்தியில்
நிறுத்திடுவார் மானிடரென்பதாலா!!
கடசி
மூப்பது போர் தேடலுக்காய்!
எழுத்தில்லா கதையின் பொருளாகி
இருக்கும் வரை வாசணையற்றதிரவியம்
என்பதாலா!!இறந்தால் 
கிடைக்கும் நினைவுச்சின்னங்கள்
என்பதால் நீ இறந்து
என் வாழ்வு க்கண்ணீருக்குள்
விதியானதே  இதனால்தானா!!

No comments: