Saturday 17 November 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அழகோவியம்


வண்ணங்களை கட்டிக்கொண்ட
   மலர்கொத்து
 சிந்துகின்றது எண்ணங்களை
தொட்டெடுத்து!!
 தென்றலுக்கு தூதுசொல்லும்
  வாசமலர்
 தென்திசைக்காற்றுக்குள்
 தெமாங்கு பாட்டெடுக்கும்
இசை மலர்
வண்டுக்குப்புதுராகத்தைத்
தொட்டுசொல்லும்  வர்ணத்தாளம்!!
வஞ்சணைக்குள் சிக்காத புதுமலர்
எண்ணத்தால் தொட்டவுடன்
ஒட்டிக்கொண்டு 
உயிருக்குள் ஒளியாகுது  வசந்தமலர்
 மழலை வர்ணத்தில் விளையாடும்
சின்னமலர் !
 மொழியின் நாத்தால் ஆடும் அழகு மலர்!!
கற்பனையில் தொட்டுவிடும்
 ஸ்ரத்தின் தந்திக்குள்  நடந்திடும்
கவிமலர்
கருணையுள்ளவர் கைளுக்கே
இசைமலர்
கொட்டமடிப்பர் பார்வைக்குள்
சிக்கா வாசனை மலர்
முயற்சியுள்ளவர் கைகே
மலர்க்கொத்தாகும் வைரமலர்
கொட்டும் மழையில் கரையாவாசமலர்
சுறாவளி தொட்டிட்டால்
வளைந்தாடும் நாணல்மலர்
சுட்டிடும் நெருப்பிலும் மறையாத
உண்மைமலர்
புரிந்தவர் உள்ளதில் நின்மதிமலர்
புரியாதவர் இதயதுக்கே முள்ளான
கருப்புமலர்.............


No comments: