நிமிடங்கள் கடந்து
வாரங்கள் கடந்து
மாதங்கள் கடந்து!!!
கடந்து கடந்து வந்திட துடிந்திடும்
புதியதோர் வருடமே!!
உன்னை வரவேற்க மனிதன்
காத்து காத்து கனவுகளை
கண்ணுக்குள் பதித்துக்கொண்டு
காலத்தோடு சண்டையிட்டு
உயிர்களை எண்ணி எண்ணி
புதியதோர் சண்டையிட
யுத்திதனை வகுத்துக் கொண்டுகூடிபேசி
நடிப்பதனை
நடிப்பதனை
பார்த்து பார்த்துவெறுத்திட
விண்ணுக்கும் மண்ணுக்கும்
வந்திட்டதே ஓர் கோவம்
அணுவின்றி ஆயுதமின்றி
தயராகுது மனிதனை வென்றிட
ஓர் யுத்ததிற்கு !!! இயறகையாய்
கொடுத்ததெல்லாம் சேர்க்கையாக்கிய
மனிதன் மட்டும் எதற்கு இயற்கையாய்
என்று எண்ணியதோ !!இயற்கையே இப்போ
யுத்தை நடத்திட துடிக்கின்றது !!
சந்தோசம் பாதி சந்தோகம் பாதி
அந்தரதில் நிறுத்தி மரணத்தை நோக்கி
நகரது பூமிக்கிரகம்
மரணத்தை கொடுத்து கொடுத்து
திருந்த முடியாமனிதனை தன்னையழிந்து
திருந்திட துணிந்ததுவே..,,,,
No comments:
Post a Comment