Sunday 15 July 2007

விலைமாது

பாவப்பட்ட ஜென்மங்கள்
இருளும் வெளிச்சமும்
ஒன்றானாது இவர்களுக்கு
பகலில்
தீண்டப்படாத உறவுகளாய்..
இரவின் ஆசைக் கிளிகளாய்
வாழ்ந்ததிடும் இவர்களை
காரிஉமிழ்ந்து வசைபாடும்
உத்தமர்கள் ஆயிரம்

ஆனால்
கொடுமை யிலும் கொடுமை
பகலில் மட்டுமே
இரவின் முதல் ரசிகனுமாய்
வாடிக்கையாளனுமாய்
முகமூடிதிருடனுமாய்
வாழ்பவர்கள் இவர்களோ

இந்த பாவப்படட
ஜென்மங்கள் தன்
உணர்ச்சிகள் விற்று
மரணத்தை தேடி
யாருக்காய் வாழ்கின்றனர்?

2 comments:

Anonymous said...

இப்படி இவர்கள் வாழ வேண்டிய அவசியம் என்ன

சு.கஜந்தி said...

அப்படி இவர்கள் வாழ விட்டால் பல
மனிதர்கள் மிருகமாகதான் அழைவார்கள்....