Tuesday 10 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஈழமாம் எம் நாட்டில்
வாழ்வதற்கு வழியின்றி
உண்பதற்கு உணவின்றி
அலை பாயும் எம் இனத்தை
கரை சேர்க்க யார் வருவார்?

வேதனையில் எம்மவர்கள்
துடிதுடிக்கும் காட்சியினை
பார்ப்பதற்கு கண்ணுண்டா?
கொடுமைகளைக் கேட்பதற்குக்
செவியுண்டா? இதனை
கூறுவதற்கு யார் வருவார்?

நீதிகள் வெந்த பின்னர்
சுடர் விடும் அநீதிகளால்
எரிகின்ற ஈழத்தை
அனைத்தெடுக்க இங்கே
யார் வருவார்?

இதயங்கள் காணுகின்ற
இன்பக்களை வென்றிட முடியாமல்
இருள் தனில் தவிக்குதையா
ஒளியின்றி எம் இனம்  இம்மினதிற்காய்
ஒளியினை  ஏற்றி வைக்கயார் வருவார்?

No comments: