Wednesday 11 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

எம் இனத்தின் உயிர்குடித்து
குருதி தனில் நீ
நனைத்தும் அடங்கிடாத
உன் தாகம்
இன்னும் தொடர்கின்றது தொடர்
கதையாய்!!

வருடத்தில் ஒரு
முறை நீ தோன்றினாய்
எம் இனத்திற்கோ
பல முறையேன்வந்தாய்?

சின்ன உயிர் தனைக்
கொள்ள எத்தனை
பெரிய ஆயுதங்கள்
பாசத்தைச் சொன்ன
இதயங்கள் கருகிய
கோலங்கள் கண்முன்னே
பார்த்துப் பார்த்து அழுதிட்டோம்
கண்ணிருந்த கோழைகளைாய்!!

ஆனாலும்! நாம்
இன்னும் கரைகின்றோம்
குருதியில்  
விடுதலைத் தீயில் எரிந்திட்டாலும்
எம் கண்முன்னே நிழலாய்
உன் சோகங்கள் மாற்ற முடியா
வலிகளாய்!
யாரிடம் சொல்வது  நாம்
 மனிதனுக்குள்  மாறுபட்ட உயிர்களான
கதை...?

No comments: