Thursday 5 July 2007

தொலைபேசி

என்னைத் தொட்ட சோகங்கள்
இது வரை தொட்டதுண்டா
யாரையும்?கண்ணீரில் கரைகின்ற
பல கதை நான் கேட்டு
என்னை நானே நொந்து கொள்ள!
ஏக்கங்கள் தனைக்கொண்டு
உறவினைத் தேடும் உறவுகள்
என்னோடு உறவாகி உறவுகொள்ள!
பாசம் தனைத்தேடித்தேடி என்னோடு
அடைக்கலமான குழந்தைகள்
ஆறுதல் தேடிப் பாசம் கொள்ள!
பிரிவின் துயரால் இதயத்தடிப்பாய் துடிக்கும்
காதல் நெஞ்சங்கள் என்னோடு
கொஞ்சிப் பேச! கொஞ்சும் இவர்களின்
வலிதனை சொல்ல வார்தையின்றி
நான் மௌமாய் தவிக்க!
தவிக்கம் என்னோடு
இயந்திர வாழ்கையில் தொலைத்த
மகிழ்ச்சியை கணவனும் மனைவியும்
என்னை அணைத்து தேடிக்கொள்ள
காத்திருகு்கம் நேரத்தின்
வலியினைச்சொல்ல வார்தையின்றி
நான் தவிக்க,தவிக்கும்
என்னையும் வம்பிலுத்து வம்பில்
மாட்டி விடும் வாலிப நெஞ்சங்களோ
உங்களை என்ன சொல்லி நான் திட்ட

No comments: