Monday 23 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

இயற்கையின் செழிப்பும்
பசுமையின் விரிப்பும்
பார்த்திடும் இடமெங்கும்
நீல வர்ணமாய் கடல் அலையும்
மோதி மோதியோடும்
பெண்ணின் நெலிவாய்
நதிகள் நடைபழக
வயல்வெளியெங்கும்
காதல் சிட்டுக்கள்
கதைபேசி மகிழ்ந்திட்ட
அழகிய தீவு

இன்று...
புதைகுழியாய்
எலும்புக்கூடுகளின்
சுடுகாடாய்
பெண் மங்கையின்
கற்பைப் பறித்திட்ட
அரக்கனின் ஆக்கிரமிப்பாய்!

அழுதிடும் குழந்தையின்
எதிரியாய் மாறிட வாழ்வின்
வாழ்கையில்லா தேசமாய்
இழப்புக்குள் சிக்கித்
தவிக்கின்றது

ரசிக்க வந்தவர்கள்
அவலங்களை படமாக்கி
சொல்லியும் புரியாத
அழிவுக்குள் மீளமுடியா
மனிதர்களானோம்
அழகிய தீவில்

No comments: