Thursday 5 July 2007

தேடலால் வந்தசாரல்.....,

எங்குமில்லா சொர்க்கத்தை
சாட்சி வைத்து!
பத்துப்பொருத்தம் தனைப்பார்த்து
சாதி மதம் கூடி வர
நட்சத்திரம் சேர்ந்து விட
காசு பொருள் ஒத்து வர
இருகுறிப்புகளின் சங்கமத்தில்
தெரியா இதயங்களை
புரியாக் காரணத்தால் தெரிந்தும்
இணைந்து விதியென்னும் மதியை
சதியால் வென்றிடச் சொல்வதா
திருமணம்?
இல்லையே...இரு உணர்வு
ஒன்றான இரு இதயங்களின்
நீண்ட நாள் கனவுகள் தானே.....

No comments: