Tuesday 24 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

எங்கள் தேசத்தின் வரலாற்றில்
இணைந்திட்ட
முதிர்வில்லா தோழனே
தியாகத்தின் தியாகமே

எம் நெஞ்சகத்தே குடி
கொண்டநெருப்பின் நெருப்பே!

யுத்த களம்தனில்
வீருநடை போட்டு
வெற்றி வெற்றியென
வென்று குவித்த
தோழனின் தோழனே

மரணத்தை உடலக்கு கொடுத்து
இலட்ச்சிய பாதைக்கு மரணம்
இல்லவே இல்லையென
எரிந்திடும் புதைகுழியில்
இருந்து விருட்சமாய்
எழுந்திட்ட வீர்களே! உம் விடுதலைக்கு
எம் தீப அஞ்சலி!

உங்களுக்காய்
எம் விழிணீர் அகற்றி
நெஞ்சம் தனில் நெருப்பேந்தி
சிந்தனை சுடரோடு
தீயாய் இணைந்து
பூக்கள் தூவி நிக்கின்றோம்

மீண்டும் மீண்டும்
ஈழம் தனில்
மனிதபூவாய் பூத்திட
வேண்டும் என்று.......


***********
எம் தேசத்தின் சரித்திரத்தில்
ஒன்று கண்ணீரில்
நனைகின்றது இன்று
பூவெடுத்து கண்ணீர்
அஞ்சலி செய்கின்றோம்

யூலையே ... நீ தந்த
கறுப்புப் புகையால்
கருகி விட்ட
மனித நேயத்தின்
நினைவுச்சுமைகளை
அழித்திட முடியாமல்

கரைகின்ற கண்ணீர்
அமுதசுரபியாய் எம்மிடம்
இருப்பதால் கரைகின்றோம்
கண்ணீரில் இன்றும்.....

No comments: