Wednesday, 18 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தீயென தன் உடலுக்கு
தீயிட்டு
புறப்பட்டாள் எட்டுத்திக்கும்
சுட்டெரிக்கும் தீயென
பெண் மங்கை!

நம்விடுதலை காற்றை
அவள் சுவாசித்தால்
மென்மை பாறையாய்
உறையா வெண் குருதியில்
தன்னுடல் நனைத்து புறப்பட்டாள்
பெண்மங்கை!

தன் திறமை தனை தான் நம்பி
 உலகிற்கு தன் வீரம் சொல்லி
தன் உறவிற்காய் கை கொடுத்தாள்
பெண் மங்கை!
தன் உயிரை துச்சமாய் எண்ணி
இரவு பகல் தனை மறந்து
பொன்மலர் தீக்குள் ஒளியா
ஈழத்துமண்ணில் விழ்ந்திட்டாள்
பெண்மங்கையாய்!

வித்துடல்கள் வீதியில்
மரணத்தின் தூய்மையால்  எம்மிடம்
சொல்லாமல் சொல்லியது
அவர்களே !சிகப்பு மலர்களென்று

No comments: