Sunday 1 July 2007

என் உயிர்ச் சாரல்............,

என்னைக் கவர்ந்த மலர்களே
நான் சண்டையிடுவதும்
பொறாமை கொள்வதும்
உங்கள் மீது மட்டுமே!


அதெப்படி!
ஒர் நாள் ப் பொழுதை
அழகாய் வாழ்கின்றீர்கள்
என்னால் ஒர் மணிப்பொழுதைக் கூட
வாழமுடியவில்லையே!

இதனால் தானோ
உங்களிடத்தில் மட்டும் நித்தமும்
தோற்றுப் போகின்றேன் நான்
இருந்தும் என் பூக்களே
உங்களை வெற்றி கொள்ள
உங்கள் மென்மையை
எனக்குள் சேகரித்து
பெண்மையாய் மலர்ந்தேன்

எதற்காக என்னைத் தண்டித்தது
உங்கள் விதி இப்போ
நானும் சருகாய்
உதிர்கின்றேன் உங்களைப் போல்

ஆனாலும் என்னைக் கவர்ந்த
மலர்களே உங்கள்
மெளனச்சிரிப்பை எனதாக்கி
உங்கள் மென்மைக்குள் வாசம்
செய்கின்றேன் நாளும்!

என்றோ ஓர் நாள்
எனக்காய் நீங்களும்
வாசம் செய்வீர்கள் என்பதால்....

No comments: