Saturday, 14 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தன் கணவன்
உயிரைக் காத்திட
முடியா..
கலியுகக் கண்ணகி
கண்மூடித்தூங்கி
பல நாட்களாச்சி!

வாகனத்தின் சத்தமெல்லாம
மரணத்தின் ஓசையாச்சி
பயந்து பயந்து பாதி உயிர்
அவளுக்கும் போயாச்சி!
இறந்திடாமல் நரகமும் சொர்க்கமும்
கண்முன்னே  தோன்றலாச்சி!

போராடிப் போராடி
களைத்திட்ட அவளைத்தேடி
வெள்ளை வேணில் வந்தம்மா
விதவையென்னும் பட்டம் ஒன்று

 யார் தடுத்தும் இறுதியில்
மாறிடாக்கோலம்
அவளுக்கும்  சொந்தமாச்சி ...!

No comments: