Friday 20 July 2007

என்னவனே...

காதல் சொல்லா
கற்பனையில் கலந்திட்ட
உறவுவே! என்
உணர்வுகள் புரிந்திடாமல்
ரசிக்கத் துடித்தவன் நீ

ஆனால்...
யாரிடமும் காணப் பாசம்
உன்னிடத்தில் கண்டேன்
நான்...

பல பேரைக் கடந்து
வந்த போதிலும்
உன் மென்மையான
இதயம் என்னை விட்டகலா
சிந்தனைஆனது ஏனோ?


துடித்திடும் என் இதயம்
சொன்னது, துடிக்காத உன்
இதயம் வரைந்து சென்றது
காதல் ஒவியம் தானென்று!

No comments: