Tuesday, 17 July 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தன்னுடல் சிதறிட
தேசமெங்கும் கலந்திட
மரணத்தை தன்னுடல்
சேர்த்து நடத்தனர்
மகிழ்ச்சி பூக்களாய்!
எம் விடுதலை காத்திட
எம் உயிர் காத்திட
தன் உயிர் தந்த
தோழர்கள்..!

மரணத்தை காதலித்து
தேசத்தை சுவாசித்து
கல்லறையை நேசித்து
எம்மிடம் சொல்லாமல்
சொல்லிச் சென்றவை
ஆயிரம்!

அதனால்! அஞ்சிய நான்
இன்று  என் விழி
நீர் கொண்டு
செய்கின்றேன் அஞ்சலி
புனிதமாய் உதிர்ந்திட்ட
உயிர்களே உங்களுக்காய்....

No comments: