Thursday 12 July 2007

யார் அவள்

வானமே இல்லாத நிலவாய்
தென்றலே தொடாத மலராய்
எழுதப்பட்ட புத்தகத்தில்
வர்ணிக்கப்படாத கவிதையாய்!
கண்களின் கண்ணீரைப் புரிந்து
கொள்ளா உறவுகளின்
சுமைதாங்கியாய்!
மூடநம்பிக்கையின் ஆணிவேரில்
தொலைந்து விட்ட சந்தோஷங்ககளாய்!
இரவின் வரவிற்காய் காத்திருக்கும்
அல்லிமலராய்!
கனவுக்குள் நிஜத்தை
தோடுபவளாய்!
தலையணைக்கு மட்டும்
தெரிந்த கண்ணீரின்
ஈரத்தை சொல்ல
யாருமில்லாதஅவள் யார்?

No comments: