Thursday 5 July 2007

என் உயிர்ச் சாரல்............,



பூவுக்குள் பூவாய்
பூமகள் இவள் உறங்க!
பாசத்தோடு உறவுகள்
 கண்ணீர் சிந்தி சுற்றி நிற்க!!

இவளையும் வெறுத்திடும்
சில இதயங்கள் பெருமூச்சு
விட்டு நிற்க

ஏனடா சந்தித்தோம்
இவளை என
சிலர் திட்டி நிற்க

இவள் மட்டும்
பூவோடு பூவாய் வாடாது
உறங்கிக் கொண்டு!
தன் இறுதி
விடுதலைப் பயணத்தில்
மலர்ந்த மகிழ்ச்சிப் பூவாய்யாகின்றாள்

இன்று
இவளுக்காய் அழுதிடும்
உறவுகள் மறந்திடுவார்
மரணத்தை மீண்டும் நாளை!!!

No comments: