Tuesday 24 July 2007

சதி.....

யாரும் யாரையும்
விரைவில் வென்றிடத்
தேடிய பாதையாய்
நீ ஏன் வந்தாய்!!

கண்ணே மணியே என
காதலால் கொஞ்சிய
கதலின் சரித்திரத்தை சகதிக்குள்
தள்ளி நீ ஏன் வந்தாய்!!

பாசத்தை போலியாக்கி
போலிக்குள் உன்னை வைத்து
துரோகத்தை நட்பாகி
தூய்மையில்லா சீரழிவை
தேடும் மனிதன் தன்னைத் தான்
வெட்டும் கொண்டுமையாய்
நீ ஏன் வந்தாய்?

புரிந்து கொள்ளா மாயையென
சொன்னவர் மாண்டிட
மண்டவர் சொல்லியதை
வாழ்பவர் மறுந்து
புரியாது போனதால்
உதிர்ந்து தவிக்கும் தவிப்பின்
தவிப்பாய் நீ ஏன் வந்தாய்?

புரிந்து கொள்ள வைத்தாலும்
புரியாது வாழ்வதும்
உன்னாலே தானே சதியே..................

No comments: