கற்பனைகள் பல கொண்டு
பட்டங்கள் பெற்ற போதும்!!
வாழ வழியின்றி
வாழ்ந்தவிடம் தானின்றி
தூரதேசத்தில் துரத்தும்
சுமைகளில் தொலைந்த
தமிழன் தேடியும் காணா
கற்பனையாய்
உடல் வருத்தி
உணவு விடுதியில்
உழைக்கின்றான் தன் குடுபத்திற்காய்!!
மரத்து போன உணர்வுகளில்
தொலைந்த மகிழ்ச்சியை
அவசர அவசரமாய்
தேடிடும் தமிழன்!
இயந்திரத்தேடு போட்டியிட்டு
போட்டியிட்டு வென்று
சவற்கார நுரைக்குள்
கைகள் குளிக்க
களைத்து வெறுத்து
வலியோடு வாழும் கொடுமைகளை
சொன்னால் தான் புரியுமா?
பரிதாவ மனித வாழ்கை
ஏக்கங்கள் தனைக் கொண்டு
கண்ணீரில் கரைந்திட
சந்தோஷ தேடலில்
தொலைந்து போன
நாட்களை தேடுது மனசு!!!
No comments:
Post a Comment