Thursday 5 July 2007

ஏன் இந்த மயக்கம்

இயற்கையால் இணைந்த
அழகிய வாழ்கைத் தோட்டத்தில்
ஒன்றோடு ஒன்றாய் உறவு கொண்டு
வாழும் நாம் இங்கே
எப்போது சிந்திப்போம் !!

பட்டிமன்றம் போட்டு
வாதிட்டு வாதிட்டு களைத்தே
விட்டோம் ஆனாலும்
தீர்ப்புகள் மட்டும் மாறி மாறி
வந்து போக இருட்டுக்குள் நின்று
கொண்டு வெளிச்சத்தில்
தவிக்கும் எம் அறிவுக்கண்
எப்போது தான் திறக்கும் இங்கே

தப்புகள் வரும்போது
நீயா? நானா? என
சண்டை போடும் நாம்
எற்றுக் கொள்வோமா?
அழகா வாழ்கை நாம்
இருவரும் சேர்வதில்
தான் என்று......

No comments: