Monday 16 July 2007

வறுமையின் கண்ணீர்

வறுமைப் பெண்ணின்
உணர்ச்சிகள்
குடும்பச்சுமையிலும்
கூலி வேலையிலும்
கரைந்து போனதால்

சீதனச்சந்தையில்
அடிமாடாய் நின்ற
வறுமைப்பெண்
வந்து வந்து போகும்
ஆண்களை ஏக்கத்தோடு
பார்த்து சொன்னாள்..

இது
வறுமையின் குற்றமோ
ஆண்களின் குற்றமோ
இல்லை
பெண்களே !! பெண்களை
புரிந்து கொள்ளா குற்றமென்று

ஆனாலும்
பணக்கார விதவைப்
பெண்ணிற்காய் கண்ணீர்
விட்டாள்
மீண்டும திருமணம்
சந்தையில்
சீதனம்ப் பேச்சியில்
விலை மாடாய் அவள்
நிற்பதை பார்த்து

தன்
கண்ணீர் துடைக்க ஆண்
இல்லாத அவளைப்பெண்
அவளுக்காய் கண்ணீர்
விட்டாள்......

No comments: