திறமைகள்!
என்னவென்று
தேடிப்பார்தேன்
ஒவ்வேறு
மனிதனின்
அறிவும்
ஒவ்வேறுவித
புரிதலின்
வடிவில் திறமையாகின்றது
திறமைகள்!
என்னவென்று
தேடிப்பார்தேன்
ஒவ்வேறு
மனிதனின்
அறிவும்
ஒவ்வேறுவித
புரிதலின்
வடிவில் திறமையாகின்றது
ஐந்தில் தனித்தவள்
ஐம்பது கடந்தும் அன்பிடம்
தோற்றே அன்பைத்தேடுகின்றாள்
அவளுக்கு கிடைத்திடாதே
தோற்கடிக்கப்படும் அன்பு
மண்ணில் புதையும் போது
சிலநேரம் பூக்குமோ
அவள் உயிரற்ற உடல்மேல்
விழுந்துடைந்த
கடிகாரம் அவள்
துடிப்பற்று நின்ற
சந்தோஷ துளிகளை
கையேந்த
காத்திருக்கின்றாள்
கருணையற்ற இறைவன்
அவளை புரியாமல்
விட்டுவிட்டான்!!
ஆண்டவர் ஆண்டாண்டு
கற்றுக்கொடுத்த
தேன்சுவை அமுதை
அமுதென கொண்டாடிய
கொண்டாக்கலாம் பொருளற்று
பிழைப்புகாய் பிழையானதால்
துன்பப்பட்டு துயரப்பட்டு
அழுகின்றது அயலவன்
கையில் அமுதென
அம்மாடியோ! இன்று
அறிவிவுக்களம் அமர்க்களப்பட்டு
ஒற்றை மனிதகுலத்தை
தட்டித்திறக்க! துடிக்குது
குறையில்லா
மதனித அறிவு மூட்டையை!!
குறையுள்ள மனிதனை
படைத்த இறைவன் மட்டும்
அழுத்திட ஆளைத்தேடுகின்றான்
இறைவா !!
சுமையின் அளவுகோல்
தெரிந்தால் சொல்லுங்களேன்!
கொஞ்ச காலம்
கும்பகரன் வாழ்வை
கடனாய் வேண்டிட !!
வாழ்க்கை வேப்பங்கயாய்
கசந்தாலும் கொஞ்சம
தூக்கமாவது கைபிடித்தே
நடந்தால் மீதிக்காலம்
ஓய்வாய் மரணித்திடும் அல்லவா
கருணை கடலாம் நீங்கள்
கடசி கண்திறந்தவது
எரித்துவிட கூடாத !
தொட்டது கெடட்து
என சொல்லிக்கேட்டுதொடாமலேயே விட்டது
சொன்னது என்னிடம்
எல்லாமே உனக்கு மட்டும்
கெட்டதுவேயென இருந்தும்
வாழ்க்கை சொல்லுது
நல்லதுவும் வருமென !!
நமக்கெதிரே ஒருவன்
வந்து எதிர்நிற்கும் வரை
தெரியாத கெட்டவன்
நம்மோடு நிற்கும் வரை
நல்லவானாவது எப்படி?
தன் இனத்தை நேசிக்கும்
நல்லவனே அதிகமாய்
தன் இனத்தை இழிவுபடுத்தி
நல்லவனாகின்றான் !
எங்கே! கற்றுக்கொடுத்தது
தமிழ் இழிவு பொருளை!!
தேடல் அதிகம் கொண்ட
அறிவாளிகளே அதிகம்
இழிவுபடுத்தி உயர்கின்றனர்
தன் இனத்திற்குள் !!1
அன்பென்னும் உயிர்
உயிர்கொள்ள ஒரு
அழிவு தேடும் சமூகம்
அன்பென்னும் சொல்லை
சுயநலக்கொள்வனவு
செய்தே விற்பனை செய்கிறதேன் !!
ஒவ்வெரு முறையும்
வெவ்வேறு அழிவிற்குள்மனிதன் சிக்கும் நிமிடம்
தவிக்கும் மனசு நிலையாக
நிலைத்தாலே நிலையாகும்
மனிதம்!
இயற்கை எழுதி
தேடாப்புனிதம்
மனிதம்தேடிக்கிடைக்கா
இறைவன் !எழுதும் அழிவு
தோற்கும் விருஞ்ச்ம்
உலகம் படைக்கும் உண்மை !!
மேடைபோட்டு வார்த்தை
விளையாட்டில் விலைபேசும்
மனிதவுரிமை
யுத்தம் ஒரு மௌனத்தின்
மாற்றத்தால் ஒவ்வேறு
மனிதனுக்குள்ளும் பேசுகின்றது
நாளைய விடுதலையை !!
எழுந்தே துடிக்கும்
வீரத்தை எரித்தே
சாம்பலாகும் வீரம்
தமிழிடமே கற்றிடவேண்டும்
பேசும் சுகந்திரம்
காக்கமறுக்கும் வாதம்
தலைப்பாகை !!
அன்பின் கிண்ணம்
ஏமாற்றத்தின் வேர்வைத்துளிகளில்
நனைவதால் வார்தைகள்
ஓட்டாமல் விழுந்து ஓடுகின்றது
இதயங்களை விட்டு
வம்மின் கிண்ணம்
வாசனைத்துளிகளால்
நனைவதால் இதயங்கள்
ஓடாமல்அழகாய்
நனைகின்றது புரியாமல் !!
வீசியடித்த சூறாவளிக்காற்றில்
வீசியெறியப்படட ஒற்றை
மரணம் விடுதலையானா
மரத்தின் கீழ் மரணம் புரியாமல்
போர்வை போர்க்கின்றது !!!
பட்டுக்கொண்டு இருக்கும்
பட் டமரத்திற்கு கலெறிந்து
போகின்றான் நேசக்காரன்
நீறுற்றி காத்திடும்
நேசமற்றதால்!!
வாழ்க்கையும்மில்லாமல்
வாழவுமுடியாமல் எதையும்
சொல்லாமல் மௌனமாய்
போகின்ற வாழ்க்கையின்
கதவுகளை திறந்துகேலிபேசிட
நிமிடம் தேடும் நிமிடம்
காகிதகப்பலில் வாழ்க்கையே
நடத்திடலாமென கனவுக்குள்
மிதக்கும் மனிதர்களின் நிமிடங்களே !!
சிக்கிக்கொண்ட சிக்கல்
சிறைக்கதவுதான்
திறக்க வழிகளுமில்லைதான்!
கைகளும் கட்டுண்டே
கிடக்கின்றது தான்
அறிவின் பாதைக்குள்
பற்பல வழிகள் வழிமாறி
கிடந்தாலும் எனது
மனமென்னும் மந்திரக்கோல்
சத்தியத்தின் இருளுக்குள்
பாதை தேடுகின்றது!
விடைகள் இல்லாக்கேள்விக்குள்
மனமென்னும் குழந்தை
கேள்வியாய் நிக்கின்றது !!!
விழிக்குளத்திற்குள் எழும்
நினைவலையின் சத்தம்எழுமுன் தாய்மாடியாகி
தூங்கிட வைக்கின்றது
இசை !!புயலும் புரண்டு
எழுவதுபோல் வாழ்க்கை
தடுத்தே கரம் காத்திட
இல்லாக் கனவிற்குள்
கற்பனை கண்டெக்கா
காகிதத்பூ குப்பைக்குள்
போட்டும் சிதையாமல்
அப்படியே கிடக்கின்றது
தனியாய் !!!
விழுந்தி விட்டவனை எழுந்திட
விடாமல் ஏறி மிதிக்கும்
மனிதநேயம்! பெரியாரை
குற்றம் சொல்வது வேடிக்கையே
தடுத்து தள்ளிவிட்டு குழிபறிக்கும்
மனிதநேயம்!தமிழ்ப்பெருமை
பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கையே !!
பைத்தியக்காரனை
வைத்தியம்
செய்து காப்பாத்திட
நினைத்தால்
செலவுசெயுங்கள்
உங்கள்
நிமிடத்தின் பொன்னை!!
பொன்னும் மண்ணும்
நம் சொந்தமானது !!!
இன்னும் !
யாரார் யாரெல்லாம்
என்னை!
தண்டிக்கவேணுமோ
நான்!அறியேன்
இன்னும்! என்
பாவக்கணக்கு முடியவில்லை
என்பதை மட்டும்
என் உடல்சுமக்கும்
உயிர் சொல்கின்றது!!
அதிகமாய் இப்போது!
சொல்லிக்கொடுக்கும் இடத்தில்
தலைவனை காணோம்
வீட்டிலும் நாட்டிலும் !
அதிகமாய் இப்போ!!
கற்றுக்கொள்ளும் இடத்தில்
பொறுமையின் தலைவியை
வீட்டிலும் நாட்டிலும்
காணோம் இப்போ !!!
படைத்தவனிடம் காத்திடும்
நீதியை படித்தவன் கற்றிட்டதால்
வீழ்ந்திடும் நீதியை பாமருக்கும்
சொல்லிக்கொடுக்கின்றான் எழுந்திட
முடியாமல்!!
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் குற்றமே என்ற நிலத்தில்
குருட்டு நீதியின்
வரலாற்று சாதனைகள்
மக்கள் உயிர்வதைத்து
வரத்தையாலத்தில் நீதியின்
உச்சம் தொட்டு
வாக்குவங்கி திறக்கின்றது!
மனிதா!பதவியில் இருப்பவனுக்கு
பதவியில் இல்லாதவனுக்கும்
வேறுபாடு தெரிந்தால்
உண்மையை காப்பாத்திட
முன்னால் வந்து பேசு !!
என் கண்ணீர்
விழும்போது
ஏந்திட யாருமில்லை என்பதை
கண்கள் புரியாமல்
அழுகின்றது !எப்படி
சொன்னால் புரியும்
என் கண்களுக்கு!
சாக்கடைக்குள் எந்த
வாசணை கலந்தாலும்சாக்கடைகளே பெரிதாதாய்
வீசும் இங்கே
மரணங்கள் புதைக்கப்படும்
உண்மைகள் ஊமையாகும்
வீரன் கோழையாவன்
அறிவிலிகள் அச்சம்
கொள்வார் அறியாமை
ஆர்ப்பரிக்கும் தவறுகள்
சரியாகும் சரிகள்
தவறாகும் தவறால்
தலைவன்
கொள்கை இழக்க இலக்கு
இயலாமையிடம் மண்டியிடை
எந்தவர்ணமானாலும்
விழுந்தபின்னர் ஒரே
நிறமே !!மாயைக்குள் விழுந்த
மனிதனை எந்த மரணஓலமும்
சிந்திக்க வைக்காது !!!
நல்ல மனிதனேயானாலும்
ஐந்து வருடத்தில் மாறிடுக்க
மனிதா!!!
யாருக்கு புரிந்தது
அவளை
யாருக்கு தெரியும்
அவளை
யாருக்கும் அறியா
அவள் கனவு
யாரோ சொல்ல
யாரோ கேட்டு
யாரோ பேசும்
அவள் இழந்ததை
யார் கொடுப்பர் அவளுக்கு !!
யாரோவாக
யாரும் இல்லாமல்
அவளாக சிந்தித்தேனும்
பேசுங்களேன் அவளை !!
அவள் என்பதால் தானே
இத்தனை விமர்சனங்கள்
அவளாகயில்லையென்றால்
எல்லாமே சரியானதாய் முடிந்திருக்கும் !!!
அருகே இருப்பதாய்
தூரமாய் அவளுக்கும்
புரியாப்பாசம் !
தூரமாய் இருந்து
அருகே இருப்பதாய்
தூரமாய் பாசமாய்
அவளைப்புரியாமல்
நிழல்களாய் உறவுகள்
ஆனால்! அவள் மட்டும்
எப்பவும் தனியாய் அவளோடு !!!
தருவாய்யென காத்திருந்த
தருணங்கள் போனது
தானாய் !
தருவியா என கேட்டு
தராமல் பதில் இல்லாமல்
தடுமாறும் தருணங்களை
புரியாமல் விளையாடும்
விளையாட்டும் பிடிக்காமல்
களைத்தேவிட்டமனசு வெறுக்கு
தானாய் தன்னை! அறியாமல்
புரியாமல் கூட தோன்றும்
தோற்றங்களே தோற்கடித்திடுது
தவறாய் !!விலகியே விதியோடு
நின்றாலும் விளையாட்டு
மட்டும் பூனையிடம் மாட்டிய
எலியாய் தவிக்கின்றது ஏனோ !!!
தனக்கு மட்டுமே தெரியும்
என நினைப்பவன்
தனக்கான உயர்வை
யாருக்காகவும்
விட்டுக்கொடுத்திடா
பாதையை மூடும் காதவாகின்றான்
தன்னைவிட
மற்றவருக்கும் தெரியும்
என நினைப்பவன் பாதையின்
கதவை திறக்கும் சாவியாகின்றான்
குறைபேசியே பழகிவிட்ட
நமக்கு நிறைவுகாப்பது
கடினம் தானே !!
யாருமே இல்லையென்ற
மனசு எனக்குள் எழும் வரை
எத்தனை எதிர்பார்ப்புக்கள்
ஏமாற்றத்தை அள்ளிகொடுத்தது
எனக்கும் !!
எல்லாம் கற்பனையின்
நிழலென புரிந்த பின்னர்
நான் யாருடைய மாயா
உலகத்தின் கண்ணாடியிலும்
தோன்றிடவில்லை !!!
இதுவரை யாரேனும்
ஒரு பெண்ணின் வலியை
புரிந்து நேசித்திட
பிறந்திருப்பதாய்
காணோம் பிறவியில்
செய்த தவமே பெண்னென
யார்யாரோ கூறினாலும்
வாழ்க்கையென்னவோ
வலியோடு ஓடும்
கடல் அலைகளே !
வரலாற்று பெருமைகளும்
சிறுமையின் உச்சம் தானே !!
பெருமைக்குள்ளும் யார்யாரோ
தோற்கடித்த காயங்களே !
நிலுக்கும் தெரியாமல் பெண்னோடு
புன்னகைக்கின்றது உள்ளே
அழுதுகொண்டு !வெற்றியின்
படிகளில் நின்றாலும்
ஏறிடும் படிகளெல்லாம்
முற்காடுகள் தான் !
தனிமையில் வாழும்
உயிரைத் தேடிபொய்யின் வானவில்குடையெடுத்தது
வாழத்தேடாதே அப்படியே
விட்டுவிடு உன் சிலநொடி
பொய்களே உயிரில்
பெரிய வலிகள்!
வலிகளை புரியாமல்
தனிமைக்குள் போராடும்
உயிருக்கு பொய்யின்
ஏமாற்றத் தனிமை
கொடுமையிலும் கொடுமை!!!
புரிந்தால் நன்மை செய்யுங்கள்
புரியவிடடால் விலகியே
நின்றுவழிவிடுங்கள் !!
இல்லையென்ற ஒற்றைச்சொல்
சொல்லாமல் நில்லாமல்
கூடவே நடக்கின்ற நடைக்குள்
போராடி விழும் உடலை
தூக்கி சுமக்க! கடவுளுக்கு கூட
விதியில் வழியில்லையாம் !!
உலகில் பெரியமுட் டாளா
பெண் இல்லை !!
பெரிய ஏமாற்றுக்காரன
ஆண் இல்லை !
காலம் கற்றுக்கொடுக்கா
கற்பனையின் ஏமாற்றமா
பெண்ணிற்கு வாழ்க்கை
இல்லை !அன்பிற்கு கிடைக்கும்
சாபமா!!ஒவ்வெறு பெண்மையும்
சுமக்கும் கருவிற்கு
அடையாளப்போராட்டம்
ஏன் !!இல்லை காதலுக்குள்
காமம் கற்றுக்கொடும்
பாடம் தான் புரிவில்லையா
பெண்மைக்கு !இல்லை
கைப்பிடிக்கும் கையின் பிடி
இன்னோர் கைக்குள் இருந்தும்
தன்னம்பிக்கை பெண்மையும்
தடுமாறிய வழிமாறி
யுத்தம் செய்யும் தலையெழுத்தேன்!!
தேடிகிடைக்கும் தேட அன்பிற்கு
விலையே சண்டையிட்டு
தன்னை தொலைக்கும் சாதனையே
வரலாற்று பக்கத்தின் வாசிக்கப்படாத
பக்கங்களா பெண்மைக்கு
கிடைக்கும் ஏமாற்றம் காலகாலமாய்
பெண்மையையே பழிவாங்கிடுது !!
என் கனவில் கூட
எனக்காக சந்தோஷம்தோற்றே விழுகின்றது
நியத்தில் எப்படி எனக்கானதாகும் !!!
இருந்தும் இருப்பதாய்
சொல்லிக்கொள்ளென
சொல்கின்றது வாழ்க்கை
விட்டுவிடாமல் துரத்துகின்றது
காரணங்கள்!!
இதுவரை புரிந்துகொள்ள
இவளை!! இனியும் புரிந்து
கொள்ள !!
யாரேனும் பிறக்கப்போவதில்லை
தோற்றவிழிகளில் விழுவது
தண்ணீராகவே இருக்கட்டும் !!!
சாடிவிளையாடும் மனிதன்
உயர்ந்தவராகவே இருக்கட்டும்
விழுந்தவள் குழிக்குள்
சாக்கடை நீரே மூடட்டும் !!
நாம் !!
நம் உணர்வுகளின் விருப்பத்திற்க்கே மற்றவர்உணர்வை எதிர்பார்க்கின்றோம்
உள்ளம் அழும்போது
புன்னகையால் மறைக்கும்
மனிததேனே மற்றவரால்
விருப்பப்படுகின்றான் !!!
இடையில் வந்து
இடையில் போகும் ஒரு
ஆணின் மரணம் ஒரு
பெண்ணை எப்படி
ஆயிட்காலத்திற்கும்
அனாதையாக்கின்றது !!!
பேர்சொல்ல பிள்ளையிருந்தாலும்
பெயருவைத்த பெற்றோரிருந்தாலும்
யாருமில்லா தனிமையே
தானாய் கிடைக்கின்றது அவளுக்கு !!!
விழிகள்!
தனக்குள் குளிக்க
விடைகள்!
இல்லா கேள்விக்குள்
பதில் தேடும்!
அவளின் இதயம்
உடைந்தே துடிக்க
வழிந்தோடுது ஏக்கம் !!
அவளின் பிறப்பும்
இறப்பும் ஏதற்கென தெரியா
முற்களின் நடுவே !!
காலங்கள்!
விரைந்து முடித்த கதையில்
அவள் எழுதித் தூக்கி போட்ட
குப்பைக்குள் நான் இன்னும்
உயிருடன் !யாரும் படித்திட
பிடிக்கா கிருக்கலாய்!!!
ஓர் நாள் கேட்டேன்
எனக்காய் இல்லையென்ற
இறைவன் ஒரு காதல்
ஜோடியின் காதலை
ரசிக்கச்சொல்கின்றான் !
வேடிக்கைதான் இருந்தும்
ரசிக்கின்றது கண்கள் !!!
காதலாய் வடிந்திட
முதல்!
முதல் முறை என்னை
இயற்கையும் ஏமாற்றிட
இது காதலில் தோற்ற
மனசின் கண்ணீர்
மழைக்குள் தொலைந்த
நம்பிக்கைச்சிதறல்!
ஒரு ஆண்
தன் தேவையின் தேடலுக்காய்
பெண்ணைத்தேடுகின்றான்!!
ஆனால் !பெண்ணோ
தன் எல்லாத்தேவையும்
அவனென தேடுகின்றாள்!