Tuesday, 9 December 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நமக்கெதிரே  ஒருவன் 

வந்து  எதிர்நிற்கும்   வரை 

தெரியாத  கெட்டவன் 

நம்மோடு  நிற்கும்  வரை 

நல்லவானாவது  எப்படி?

தன்  இனத்தை  நேசிக்கும் 

நல்லவனே  அதிகமாய் 

தன்  இனத்தை  இழிவுபடுத்தி 

நல்லவனாகின்றான் !

எங்கே!  கற்றுக்கொடுத்தது 

தமிழ்  இழிவு பொருளை!! 

தேடல் அதிகம் கொண்ட 

அறிவாளிகளே  அதிகம் 

இழிவுபடுத்தி  உயர்கின்றனர்  

தன்  இனத்திற்குள் !!1

No comments: