Wednesday, 22 October 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்.......,

சிக்கிக்கொண்ட  சிக்கல் 

சிறைக்கதவுதான் 

 திறக்க வழிகளுமில்லைதான்! 

கைகளும் கட்டுண்டே 

கிடக்கின்றது   தான் 

அறிவின்  பாதைக்குள் 

பற்பல  வழிகள்  வழிமாறி 

கிடந்தாலும்  எனது 

மனமென்னும்  மந்திரக்கோல் 

சத்தியத்தின் இருளுக்குள் 

 பாதை தேடுகின்றது!

விடைகள்  இல்லாக்கேள்விக்குள் 

மனமென்னும் குழந்தை

கேள்வியாய்  நிக்கின்றது !!!


No comments: