Monday, 22 September 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 யாருக்கு  புரிந்தது

 அவளை 


யாருக்கு  தெரியும் 

அவளை 

யாருக்கும்   அறியா

 அவள் கனவு 

யாரோ  சொல்ல  

யாரோ கேட்டு 

யாரோ  பேசும்  

 அவள்  இழந்ததை 

யார்  கொடுப்பர்  அவளுக்கு !!

யாரோவாக

யாரும்  இல்லாமல் 

அவளாக  சிந்தித்தேனும் 

பேசுங்களேன் அவளை !!

அவள் என்பதால்  தானே 

இத்தனை  விமர்சனங்கள் 

அவளாகயில்லையென்றால் 

எல்லாமே  சரியானதாய்  முடிந்திருக்கும் !!!

No comments: