இதுவரை யாரேனும்
ஒரு பெண்ணின் வலியை
புரிந்து நேசித்திட
பிறந்திருப்பதாய்
காணோம் பிறவியில்
செய்த தவமே பெண்னென
யார்யாரோ கூறினாலும்
வாழ்க்கையென்னவோ
வலியோடு ஓடும்
கடல் அலைகளே !
வரலாற்று பெருமைகளும்
சிறுமையின் உச்சம் தானே !!
பெருமைக்குள்ளும் யார்யாரோ
தோற்கடித்த காயங்களே !
நிலுக்கும் தெரியாமல் பெண்னோடு
புன்னகைக்கின்றது உள்ளே
அழுதுகொண்டு !வெற்றியின்
படிகளில் நின்றாலும்
ஏறிடும் படிகளெல்லாம்
முற்காடுகள் தான் !
.jpg)
No comments:
Post a Comment